அஜித் வெளிப்படையாக சொல்லிட்டாரு.. விஜய்க்கு அந்த எண்ணம் இருக்கு.. மீசை ராஜேந்திரன் பேச்சால் வெடித்த புதிய பிரச்சனை

தமிழ் சினிமாவில் போட்டிகள் அதிகம் ரஜினி கமலை தொடர்ந்து அஜித் – விஜய் தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றனர். அந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது அசத்தியது.

அதனைத் தொடர்ந்து வருகின்ற தீபாவளியை முன்னிட்டு விஜயின் லியோ, AK 62 போன்ற படங்கள் மோத இருப்பதாகவும் தகவல்கள் கசிக்கின்றன. இப்படி தொடர்ந்து மோத காரணம் யார் பெரிய நடிகர், நம்பர் ஒன் நடிகர் என்கின்ற இடத்திற்கு தகுதியானவர் என தெரிந்துக்கொள்ள மோதிப் பார்க்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க யாருக்கு அதிக ஆசை இருக்கிறது..

என்பது குறித்து தற்பொழுது மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. அதாவது இந்த பிரச்சினையை வாரிசு மேடையில் முதலில் கொளுத்தி போட்டதே சரத்குமார் தான் என்று மீசை ராஜேந்திரன் கூறினார் மேலும் பேசிய அவர்.. சரத்குமார் தான் மீனா 40 விழாவில் ரஜினியின் என்ட்ரியை பார்த்து ரஜினி வந்ததும் ஒட்டுமொத்த இன்ட்ரஸ்டிரியே வந்த மாதிரி என மாற்றி பேசி இருக்கிறார் என்று கூறினார்.

அது மட்டுமல்லாமல் சரத்குமார் அப்படி விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொன்னதும் கண்டிப்பாக விஜய் அந்த மேடையில் அதை எதிர்த்துப் பேசியிருக்க வேண்டும் எனவும் கூறினார் மேலும் அஜித்தையும் சூப்பர் ஸ்டார் என்று பல ரசிகர்கள் இணையதளத்தில் சண்டை போட்டுக் கொண்டாலும் அஜித் எப்பொழுதுமே யாரை வைத்தும் மேடையில் சொல்ல சொன்னதே இல்லை இந்த கருத்தை பார்க்கும் பொழுது ஏதோ விஜய் தான்..

சரத்குமாரை மேடையில் தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்ல வைத்த மாதிரி பேசி இருக்கிறார் மேலும் அஜித் தன்னை தல என்று அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்க வேண்டாம் அஜித் அல்லது ஏகே என்று அழைத்தால் போதும் என ஓப்பனாக கூறியிருந்தார் ஆனால் அதைப்போலவே ஒரு ஸ்டேட்மென்ட் விஜய் இதுவரை கூறவே இல்லை இதிலிருந்து விஜய் தான் தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வது இருக்கிறது போலத்தான் தெரிகிறது என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Leave a Comment