கமலஹாசனிற்க்கு முன்பே இயக்குனருக்கு காரை பரிசளித்த அஜித்.!

கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதனை கொண்டாடும் வகையில் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தன்னுடைய அன்பு பரிசாக பைக், கார், வாட்ச் போன்றவற்றை அளித்தார்.

மேலும் விக்ரம் இத்திரைப்படம் பான் இந்தியன் திரைப்படமாக இருப்பது கோலிவுட் வட்டாரங்கள் மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் கமலுக்கு முன்பே இயக்குனர் ஒருவக்கு அஜித் கார் பரிசு அளித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 23 வருடங்களுக்கு முன்பாக படத்தின் வெற்றிக்காக இல்லாமல் இப்படத்தின் பரஸ்ட்  காப்பியை பார்த்து இயக்குனருக்கு கார் பரிசாக அளித்துள்ளார் அஜித்.  அஜித்தின் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று ஆசை.

இத்திரைப்படம் வெற்றி பெற்றாலும் பாராட்டு இயக்குனர் வசந்திற்க்கு தான் கிடைத்தது.  அதில் வசந்தின் உதவி இயக்குனராக எஸ்.கே.சூரியா பணியாற்றியிருந்தார்.  அப்பொழுதிலிருந்தே அஜித்தும் எஸ்.கே.சூர்யாவும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஒரு காலகட்டத்தில் எஸ்.கே.சூர்யா அஜித்திற்கு வாலி திரைப்படத்தின் கதையை கூற அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டது.பிறகு அஜித் கொஞ்ச நாள் மட்டும் காத்திருக்குமாறு கூறியுள்ளார். உடனடியாக தொடங்க முடியவில்லை என்றாலும் 1999-ல் நான் வாலி படத்தை எடுக்க முடிந்தது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுதே அஜித் எஸ். கே.சூர்யாவுக்கு பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் வாலி திரைப்படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எஸ்.ஜே.சூர்யாவிடம் அஜித் உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டாராம்.

ஒயிட் கலர் பிடிக்கும் என்று எஸ்.கே.சூர்யா சொல்ல சில நாட்கள் கழித்து வெள்ளை நிற சான்ட்ரோ காரை எஸ்.கே சூர்யாவிற்கு பரிசாக அஜித் அளித்துள்ளார்.  மேலும் இத்திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்காக உங்களுக்கு இந்த காரை பரிசீலிக்கவில்லை ஃபர்ஸ்ட் காப்பி பார்த்து விட்டு காரை பரிசளித்தேன் என்று அஜீத் கூறியுள்ளார்.  மேலும் அந்தக் காலகட்டத்தில் எல்லாம் படம் வெற்றி பெற்றால் இவ்வாறு கார் பரிசளிப்பது வழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment