அஜித்திற்கு முதன்முதலில் ஒரு கோடி சம்பளமாக பேசப்பட்டது எந்த திரைப்படத்தில் தெரியுமா.? அட அப்பவே ஒரு கோடியா.!

தல அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர் அவர், அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகிய விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூலில் நல்ல விமர்சனங்களை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இன்று பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அஜீத் ஒரு காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் யாராலும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார், இவர் நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அஜித் தற்பொழுது ஒரு படத்திற்கு ஐம்பது கோடி வரை சம்பளமாக வாங்குகிறார், இந்த நிலையில் அஜித் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருந்தது எப்பொழுது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ஆனந்த பூங்காற்றே, அவள்வருவாளா ஆகிய வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் ராஜ்கபூர், தற்போது இவர் குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார் ஆனால் இவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம், அஜித்துடன் இரண்டு திரைப்படங்களை வெற்றிப்படமாக மாற்றியவர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க இருந்தார்.

அப்பொழுது பிரபல தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்திடம் தல அஜித்தை வைத்து இரண்டு வேடங்களில் ராமச்சந்திரா என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்க இருந்தாராம், இந்தத் திரைப்படத்திற்காக தான் அஜித்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது, அதன்பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக இந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

ஆனாலும் ராமச்சந்திரா என்ற பெயரில் வேறு ஒரு கதையில் நடிகர் சத்யராஜ் நடித்து ஒரு திரைப்படம் வெளியானது குறிப்பிடதக்கது, சமீபத்தில் இந்த தகவலை பிரபல ராஜ்கபூர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment