சுதா கொங்கராவை விடாமல் சமூக வலைத்தளத்தில் துரத்தும் அஜித் ரசிகர்கள்.! முதலில் கேட்ட கேள்வி என்ன தெரியுமா.?

சினிமா உலகில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அந்த பெண் இயக்குனர்கள் ஒவ்வொருவரும்  சிறப்பான படங்களை கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில்  தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்துகிறார் பெண் இயக்குனர் சுதா கொங்காரா.

முதலில் மாதவன், ரித்திகா சிங் ஆகியவர்களை வைத்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதனைத் தொடர்ந்து நல்ல கதைகளை டாப் ஹீரோக்களுக்கு சொல்லி வந்தார் அந்த வகையில் சூர்யாவுக்கு சொன்ன சூரரைப்போற்று கதை ரொம்பப் பிடித்துப் போகவே உடனடியாக எடுக்கப்பட்டது.

இந்த படமும் நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் படமாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதன்பின்  இவர் பல சிறந்த ஹீரோக்களுக்கு கதை சொல்லி வருகிறார் அந்த வகையில் அஜித்திற்கும் ஒரு சிறப்பான கதையை எழுதி வைத்திருக்கிறார் அவருடன் வெகுவிரைவிலேயே இணைய போவதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் அண்மையில் பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா இதுக்காக ஒரு ஸ்பெஷலாக கதையை எழுதி வைத்திருக்கிறாராம் அந்தக் கதையை அஜீத்துக்கு மிக சிறப்பாக பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. வெகுவிரைவிலேயே இது சாத்தியமாகும் என ஜிவி பிரகாஷ் சொல்லியிருந்தார். இதனையடுத்து சுதா கொங்காரா அஜித்தின் 61 அல்லது 62 வது படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அஜித்தோ  வினோத், விக்னேஷ் சிவன்  போன்ற இயக்குனர்களுடன் நடித்துவிட்டு 63 வது திரைப்படத்தில்  சுதா கொங்கரா அவருடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுதா கொங்கராவை சமூகவலைத்தள பக்கத்தில் தொடர்புகொண்டு நீங்கள் எப்பொழுது அஜீத்தை வைத்து படம் எடுக்கப் போகிறீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு இந்த கேள்விக்கு விரைவில் பதில் அளிக்கிறேன் என்பது போல அவர் பதிவை போட்டுள்ளார்.

Leave a Comment