தனக்கென வரையறுக்கப்பட்ட கொள்கையில் இருந்து விலகும் அஜித்..! உண்மையை சரியான நேரம் பார்த்து போட்டு உடைத்த பிரபலம்.

நடிகர் அஜித் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார்.

இப்போது அஜித்தின் படம் நல்லா இருக்கிறதோ இல்லையோ அது இரண்டாம் பட்சம் ஆனால் அவரது ரசிகர்கள் அஜித்திற்காக அந்த படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்து கொண்டாடுவது வழக்கம். அந்த அளவிற்கு எண்ணற்ற ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித். இருந்தாலும் பதிலுக்கு அஜித் ரசிகர்களை பார்ப்பதோ பேசுவதோ போன்ற எந்த ஒரு தொடர்பிலும் இருக்க மாட்டார்.

ஏன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட கலந்து கொள்ள மாட்டார் மற்றும் பொது நிகழ்ச்சி போன்ற எதிலும் தலை காட்டாமல் தான் இருந்து வருகிறார் அஜித். இவரை பார்ப்பதே மிக கடினமாக இருந்தது. ஆனால் சில மாதங்களாக அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல புகைப்படங்கள் வெளியாகின மற்றும் குடும்ப புகைப்படங்கள், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்று அவர் எது செய்து வந்தாலும்..

அந்த அப்டேட் ரசிகர்களுக்கு தெரிந்த வண்ணமே இருந்தன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் அண்மைக்காலமாக பான் இந்திய அளவிலேயே திரைப்படங்கள் வெளியாகின்றன அதற்காக பல நடிகர்களும் வெளிநாடுகளுக்கு சென்று ப்ரோமோஷன் செய்கின்றனர். அப்படியெல்லாம் செய்தால்தான் அந்த படம் சிறப்பாக ஓடுகிறது.

ஆனால் இதற்கு மாறாக அஜித் இப்படி எதுவும் செய்யாததால் அவரது ரசிகர்களும் கம்மியாகி விடுவார்களோ என்ற பயம் அவருக்கு வந்துள்ளது போல அதனால்தான் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அஜித் வெளிவந்து கொண்டிருக்கிறார் என வலைபேச்சு அந்தணர் கூறியுள்ளார். இது நல்ல விஷயம் தான் கூடிய விரைவிலேயே அவர் மற்ற நடிகர்கள் போல அனைத்திலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version