மொத்த படக்குழுவும் அலறும்படியாக ஷாலினிடம் காதலை கூறிய அஜித்.! இருந்தாலும் இவ்வளவு தில்லு ஆகாது.!

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களுடன் தனது அடுத்த திரைப்படத்தில் கைகோர்த்துள்ளார் எனவும் தகவல் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மேலும் நடிகர் அஜித்தின் திருமண வாழ்க்கையில் தன்னுடன் நடித்து வந்த நடிகை ஷாலினி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்நிலையில் நடிகை ஷாலினிடம் அஜித் எப்படி தனது காதலை வெளிப்படுத்தினார் என்பதை ஒரு பிரபலம் ஒருவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளாராம்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அஜித் மற்றும் ஷாலினி இருவர்களுக்கும் காதல் ஏற்பட்டது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக யாரை போட வேண்டும் என இந்த திரைப்படத்தின் இயக்குனர் சரண் அவர்கள் அஜித்திற்கு சரியான ஜோடி யார் என்று தேடிக் கொண்டிருந்த நேரத்தில் நடிகை ஷாலினி அவர்களை ஞாபகம் வந்ததாம்.

நடிகை ஷாலினி அவர்களை அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்க வைக்க சரண் அணுகிய பொழுது நடிகை ஷாலினி சரண் அவர்களிடம் நான் திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன் நான் அடுத்ததாக படிப்பு போன்றவற்றில் ஈடுபட இருக்கிறேன் என்று சொன்னதும் இயக்குனர் சரண் அவர்களுக்கு தூக்கி வாரி போட்டுவிட்டதாம்.

இதன் பிறகு இந்த விஷயம் எப்படியோ அஜித்திற்கு தெரிய அஜித் உடனே போன் செய்து நான் தான் இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று அஜித் ஷாலினியிடம் கூறிய பொழுது எனக்கு இரண்டு நாள் டைம் கொடுங்க என அஜித்திடம் ஷாலினி கேட்டுள்ளாராம் பிறகு ஷாலினி ஓகே சொல்லி இந்த திரைப்படத்தில் நடிக்க வந்தாராம்.

படப்பிடிப்பின் பொழுது அஜித் ஷாலினி அவர்களை ஒருதலையாக காதலித்து வந்தாராம் அதனை எப்படியாவது ஒரு நாள் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அஜித் ஒவ்வொரு நாளும் தனது மனதிலேயே வைத்திருந்தாராம். இறுதியாக ஒருநாள் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் சரண் இடம் சென்று அஜித் சரண் சார் என்னை பத்து,பதினைந்து நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக கால் ஷீட் எடுக்கிறார்கள் எனக்கு அது பிடிக்கவில்லை.

ajith
ajith

நான் ஒரே நாள் கால்ஷீட் தந்து விடுகிறேன் மொத்த சீனையும் முடித்து விடுங்கள் என்று கூறியதும் இயக்குனர் சரண் அவர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டதாம். அதன் பிறகு நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வைத்து படம் எடுக்கும் பொழுது நான் அந்த கேப்பில் ஷாலினியை காதலித்து விடுவேனோ எனக்கு பயமாக இருக்கிறது என ஷாலினி அவர்கள் கேட்கும் அளவிற்கு சத்தமாக அஜித் கூறினாராம்.

இவர் கூறியது மொத்த படபிடிப்பு தளத்திற்கும் கேட்டுள்ளதாம். ஒரு நிமிடம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அனைவரும் அஜித்தை திரும்பி பார்த்தார்களாம் அப்பொழுது ஷாலினி அவர்கள் கொஞ்சம் வெட்கப்பட்டாராம் அப்பொழுதுதான் இருவரும் காதலித்து வருகிறார்கள் என பட குழு நம்பினார்கள் எனவும் இந்த தகவலை அந்த பேட்டியில் பிரபலம் ஒருவர் கூறியுள்ளதாக மிக வேகமாக வைரலாகி வருகிறது

Leave a Comment