துணிவு படத்தின் டப்பிங்கை பேசி முடித்த அஜித் – முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்..!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைக்கோர்த்து துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பதுடன் செண்டிமெண்ட் சீன்களும் அதிகம் இடம்பெறும் என தெரிய வருகிறது துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா..

மற்றும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கின், யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், பிக்பாஸ் பிரபலங்கள் அமீர், பாவனி, சிபி போன்றவர்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது தற்போது இந்த படத்தின் படபிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக..

முடிந்த நிலையில் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளது. ஏற்கனவே மலையாள நடிகை மஞ்சு வாரியர் அமீர் போன்றவர்கள் டப்பிங் பேசி முடித்துள்ள நிலையில் தற்போது நடிகர் அஜித்குமாரும் டப்பிங் பணிகளை பேசி முடித்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் செம்ம மாஸாகவும், சீன்னாகவும் இருக்கிறார் எனக் கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகர் அஜித்குமார் டப்பிங் பேசியபோது செம அழகாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை..

ajith
ajith

Leave a Comment