வில்லனாக அஜித் ஹீரோவாக விஜய்..! கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போன திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் என்றால் அது விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தான் அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இன்று வரை எதிர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

ஆனால் அந்த செயல் எப்பொழுதுதான் நடக்கும் என்பது புரியாத புதிராகவே இருந்து கொண்டிருக்கிறது ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று வரை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது இன் நிலையில் அப்படி ஒரு வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்தும் அதை மிஸ் செய்துள்ளார்கள்.

அவை வேற எதுவும் கிடையாது மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது அதில் வில்லனாக நடிகர் அஜித்தும் ஹீரோவாக தளபதி விஜய் அவர்களும் நடிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தின் கதையை கூட மோகன் ராஜா அவர்கள் தல அஜித்தை வைத்து தான் எழுதியுள்ளார் ஆனால் அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதன் காரணமாக தளபதி விஜய்யும் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியை ஹீரோவாக போட சொல்லி தளபதி விஜய் தான் கூறினாராம் பின்னர் தான் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி அவர்கள் ஹீரோவாகவும் அரவிந்த்சாமி அவர்கள் வில்லனாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படத்தில் இவர்கள் இல்லாமல் அஜித் விஜய் நடித்திருந்தால் மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு நாங்களும் சமம் தான் என்பதை இந்த திரைப்படத்தில் நடித்து ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பல்வேறு விருதுகளை வாங்கி கவுரவித்து விட்டார்கள்.

Leave a Comment