அஜித், விஜய்யை தொடர்ந்து ரசிகர்களுக்காக புதிய முடிவை எடுத்த அருண் விஜய் – யானை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அதிரடிப் பேச்சு.

சினிமாவுலகில் டாப் நடிகர்களுக்கு என ஒரு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அந்த ஹீரோ என்ன செய்கிறாரோ அதை உடனே செய்வது ரசிகர்களின் வழக்கம் சொல்லப்போனால் அந்த ஹீரோ முடி ஹேர் ஸ்டைல் சற்று வித்யாசமாக வைத்திருந்தால்..

அதை உடனே பின்பற்றுவார்கள் கழுத்தில் ஏதாவது டாலர் செயின் அணிந்து இருந்தாள்  அதை உடனே பின்பற்றுவது வழக்கம். பேண்ட் சட்டை என போய்க் கொண்டிருந்த நிலையில் படங்களில் அந்த ஹீரோ சரக்கு அடிப்பது போன்று அல்லது சிகரெட் பிடிப்பது போன்று இருந்தால் அதையும் பின்பற்றி வந்தனர் இதனால் பல இளைய சமுதாயம் சீர் கேட்டது.

இதை உணர்ந்து கொண்ட ஒருசில டாப் நடிகர்கள் தனது படங்களில் குடிப்பது போன்ற அல்லது சிகரெட் பிடிப்பது போன்றவற்றை தவிர்த்தனர். இதை உணர்ந்து வளர்ந்து வரும் ஹீரோக்கள் கூட தற்போது கொஞ்சம் கொஞ்சமாக  படங்களில் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கின்றனர்.

அந்த வகையில் அண்மையில் நடிகர் கார்த்தி எவ்வளவு கோடி நீங்கள் கொட்டி கொடுத்தாலும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறி பதிலளித்தார் அவரை தொடர்ந்து நடிகர் அருண் விஜய்யும் யானை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்பொழுது அவர் படத்தை பற்றி சிறப்பாக பேசி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சிகரெட் அல்லது குடிப்பழக்கம் வரும் காட்சிகளில் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு நிச்சயமாக இனி வரும் படங்களில் அது போன்று நடிக்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளார்.

Leave a Comment