ரஜினிக்கு பிடித்த கதையில் நடித்த அஜித்..! படம் பிளாக்பஸ்டர் ஹிட்..

சினிமா உலகில் இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் ஒரு சிலர் நல்ல கதைகளை தவறவிடுவது வழக்கம் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் கதையை கேட்டுவிட்டு பின் தவற விட்டு இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

கே எஸ் ரவிக்குமார் உலகநாயகன் கமலஹாசனை வைத்து 2000ம் ஆண்டு எடுத்த திரைப்படம் தெனாலி இந்த திரைப்படம் உருவாகுவதற்கு முன்பே உலக நாயகன் கமலஹாசன் கே எஸ் ரவிக்குமாரிடம் அன்பே சிவம் படத்தின் கதையை கூறி உள்ளார் ஒருநாள் கேஎஸ் ரவிக்குமார் ரஜினியை சந்தித்துள்ளார்.

அப்பொழுது கமல் கூறிய அன்பே சிவம் படத்தின் கதையை கூறியுள்ளார் மேலும் தெனாலி படத்தின் கதையையும் கூறி உள்ளார். சிறிது நேரம் போக அப்பா – இரண்டு மகன்கள் உள்ள ஒரு கதையையும் கூறியுள்ளார்.. இதில் ரஜினிக்கு அப்பா மகன் என கூறிய கதை ரொம்ப பிடித்து போகவே அது குறித்து விலாவாரியாக கேட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொள்ள மாட்டார் அவர் நடிக்கவில்லை என்றால் நான் நடிக்கிறேன் என கூறி இருக்கிறார்… தெனாலி படத்தை கே எஸ் ரவிக்குமார் எடுத்து அசத்தினார் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஜக்குபாய் என்னும் படத்தை எடுத்தார் ஆனால் சில காரணங்களால் அந்த படம் தடைபட்டது.

அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார் ரஜினியிடம் சொன்ன அப்பா மகன் கதையை ரஜினியை வைத்து எடுக்காமல் திடீரென அஜித்திடம் இந்த கதையை சொல்லவே அவருக்கு அது ரொம்ப பிடித்து போக படமாக உருவாகியது அஜித் சூப்பராக மூன்று கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். அந்த படம் தான் வரலாறு..  படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் எதிர்பாராத விதமாக அஜித்திற்கு சென்றது.

Leave a Comment