பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடிக்க போவது யார்.? சரவணன் விக்ரம் குறித்து ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ..

Pandiyan stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் பொழுது கண்ணன் எடுத்துக் கொண்ட வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பகால கட்டத்தில் டிஆர்பில் முன்னணி வகித்து வந்த இந்த சீரியலுக்கு சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் தங்களுடைய புது வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சமீபத்தில் மீனா அப்பாவை அவருடைய இரண்டாவது மாப்பிள்ளை பிரசாந்த் கொலை செய்துவிட்டு அந்த பழியை கதிர், ஜீவா மீது போட்டு விடுகிறார். மீனாவும் அதை நம்பி தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் பின் ஒரு கட்டத்திற்கு பிரசாந்த் தான் கொலையை செய்திருக்கிறார் என்பது மீனாவிற்கு தெரிய வருகிறது.

எனவே இதன் மூலம் கதிர், ஜீவாவை மீனா காப்பாற்றுவாரா? பிரசாந்த் தண்டிக்கப்படுவாரா? மீனாவின் அப்பா கண் விழிப்பாரா? போன்ற அதிரடியான திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கும் நிலையில் இந்த சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வந்த சரவணன் விக்ரம் சமீபத்தில் விஜய் டிவியில் அறிமுகமான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

எனவே இதற்கு மேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் கண்ணன் கேரக்டரில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் என்பது சரவணன் விக்ரமுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை நடிகை தீபிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு அதில் உன்னை ரொம்ப மிஸ் செய்வேன் பையா என சரவண விக்ரம் எனவும் கூறி இருக்கிறார்.