செல்பி எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா த்ரிஷா.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவியே புரட்டி போட உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு இந்த படம் தற்போது வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பாடல் வரிகளை வைரமுத்து அவர்கள் எழுதியுள்ளார் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடித்து உள்ளனர். இதில் திரிஷா  குந்தவை கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவி மந்தாகினி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து குந்தவிதேவியும் நந்தினி தேவையும் பொன்னியின் செல்வன் பட பிடிப்பின் போது இருவரும் சேர்ந்து செல்பி எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை த்ரிஷா.இந்த புகைப்படத்தை தற்போதைய நேரத்தில் வெளியிட்டுள்ளனர் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் அடுத்த திரைப்படம் தளபதி 67 இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வாரிசு திரைப்படத்தை விட அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட நீண்ட  ஆண்டுகள் பிறகு நடிகர் விஜயும் நடிகை திரிஷாவும் இணைகிறார்கள் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகளை அடிக்கடி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் குந்தவை தேவியும் நந்தினி தேவையும் இணைந்து செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment