ஐஸ்வர்யாராய்னா பெரிய கொம்பா.! அவர் என்ன என்னோட நடிக்க முடியாதுன்னு சொல்றது.. நான் அவருடன் நடிக்க மாட்டேன் என கூறிய முன்னணி நடிகர்…

நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து ஒரு கட்டத்தில் உலக அழகி என்ற பட்டத்தை பெற்றார் அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்த இவர் தமிழில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படத்தின் நடிகரை எனக்காக சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அப்படி செய்யவில்லை என்றால் அந்த நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் இதனால் கடுப்பான அந்த நடிகர் அவர் என்ன என்ன வேணான்னு சொல்றது நான் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் வேற யாரும் இல்லை நடிகர் அஜீத் அவர்கள் தான் அதாவது கடந்த 2000 ஆண்டு இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், மம்முட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை தபு அவர்கள் நடித்திருப்பார் ஆனால் முதலில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் அஜித்துடன் நடிப்பதற்கு சில கண்டிஷன் போட்டு இருக்கிறார் அதாவது அஜித் தாடியை சேவ் பண்ணினால் தான் அவருக்கு ஜோடியாக நான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இதைக் கேட்டு கோபமடைந்த அஜித் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் சரி மற்றவருக்காக என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாராம் அதன் பிறகுதான் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக அப்பாஸ் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment