நந்தினியும், குந்தவையும் சேர்ந்து எடுத்துக் கொண்ட குளு குளு புகைப்படம்.. யாரு அழகா இருக்கா.?

இயக்குனர் மணிரத்தினம் உண்மை மற்றும் நாவல்களை சம்பந்தமான படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார்.

அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை கொடுத்தனர் அதன் விளைவாக பட்டிதொட்டி எங்கும் இந்த படம் பரவியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அள்ளிக் குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் நாளை கோலாக்காலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், விக்ரம் பிரபு, கிஷோர், பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  நடித்துள்ளனர். மேலும் இரண்டாவது பாகத்தின் ப்ரோமோ, மேக்கிங் வீடியோ, ட்ரைலர், போஸ்டர் போன்றவை வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்து உள்ளது.

இந்த படமும் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்பதே பலரின் கருத்து உண்மையில் இந்த படம் முதல் பாகத்தின் வசூலை விட இரண்டாவது பாகத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது பொறுத்து இருந்து பார்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும், திரிஷாவும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உலக அழகி ஐஸ்வர்யா ராயை விட திரிஷா அழகாக இருப்பதாக கூறி கமென்ட் அடித்து வருகின்றனர். லைக்குகளை தட்டி வீசிவருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் திரிஷா, ஐஸ்வர்யா சேர்ந்து எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை..

aishwarya and trisha
aishwarya and trisha

Leave a Comment