பிறந்தநாள் அன்றும்.. நடிகர் தனுஷை அழவைத்த ஐஸ்வர்யா..? என்ன நடந்தது தெரியுமா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள்  ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர். சூப்பராக ஓடிக் கொண்டிருந்த இவர்கள் திடீரென கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

இவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிந்தது இருப்பினும் தொடர்ந்து ஒரு பக்கம் குடும்பத்தினர் சேர்த்து வைக்க முயற்சித்து வந்து கொண்டிருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு மகன்களும் சில நாட்கள் அப்பா உடனும் சில நாட்கள் அம்மாவுடனும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வந்துள்ளது தனுஷின் 39 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் வருவார்கள் என தனுஷ் எதிர்பார்த்தார் குறிப்பாக தனது இரண்டு மகன்கள் வருவார்கள் என எதிர்பார்த்தார் ஆனால் ஐஸ்வர்யா தனது இரண்டு மகன்களையும் தனுஷின் பிறந்த நாளுக்கு அனுப்பவில்லை காரணம் தனுஷ் உடன் அவரது மகன்கள் ரொம்ப ஜாலியாக இருப்பதை பார்த்த ஐஸ்வர்யா இனியும் தனது மகன்களை அவர்கள் பக்கம் அனுப்பினால் தனக்கு ஆதரவு இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்து கொண்டு தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கூட மகன்களை அனுப்பவில்லையாம் இதனால் ஏமாந்து போனார் தனுஷ்.

மேலும் தனது மகன்களே தனது பிறந்தநாளுக்கு வரவில்லை என்பதால் தனுஷும் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடவில்லை என சொல்லப்படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாடாததால் உடனடியாக படத்தின் பிரமோஷன் வேலைகளை பார்க்கத் தொடங்கினார் ஆம் பிறந்தநாள் முன்னிட்டு தனுஷ் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தீவிரமாக பார்த்து வந்தார். இணையதள பக்கத்தில் இச்செய்தி பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment