ஆண்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்ந்து தனக்கு நடந்த கொடுரமான சம்பவத்தை கூறி பகீர் கிளப்பிய ஐஸ்வர்யா லட்ஷ்மி.! அட லிஸ்ட்ல இன்னம் என்தன பெர்தாம்பா இருக்காங்க…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டா குஸ்தி திரைப்படத்தில் ஒரு குஸ்தி வீராங்கனையாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இது ஒரு சவாலாக இந்த படம் எனக்கு இருந்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அதிலும் அந்த பேட்டியில் அவர் தனக்கு நடந்த ஒரு அசம்பாவித சம்பவத்தையும் கூறியுள்ளார். இவர் கூறியதைக் கேட்டு பதறிப் போய் விட்டார்கள் அவருடைய ரசிகர்கள்.

அப்படி அவர் என்ன கூறினார் என்றால் தான் சிறு வயதில் இருக்கும் போது தன்னை ஒரு நபர் தவறாக தொட்டுப் பார்த்து இருக்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் அப்போது எனக்கு தெரியாது என நான் சிறு வயதில் இருந்ததால் அந்த அளவிற்கு விவரம் தெரியாது ஆனால் இதே போல கோயம்புத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது அங்கு ஒரு நபர் என் மீது கை வைத்து உரசி பார்த்தார் உடனே நான் அவரை அடித்து அவமானப்படுத்தி விட்டேன் என்று கூறி பகீர் கிளப்பி உள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

மேலும் இதே போல நடிகை ஆண்ட்ரியாவும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ஊடகப் பேட்டியில் அவர்களுடைய அசம்பாவித சம்பவங்கள் பற்றி கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதே போல் காரணத்தை கூறியுள்ளார்.

Leave a Comment