திடிரென முடிவை மாற்றிய ஐஸ்வர்யா தனுஷ் .? உச்ச கட்ட சந்தோசத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து அறிவித்திருந்தனர் அவர்களின் அந்த அறிவிப்பு தனுசு ரசிகர்களை மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

திருமணம் ஆகி பல ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம் தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம் நாங்கள் எங்களைப் புரிந்து கொள்ள இந்த பிரிவு உறுதுணையாக இருக்கும் எனவும் எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தனர்.

விவாகரத்து அவர்களின் தனிப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர் அது மட்டுமல்லாமல் மகன்களுக்காவது இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் கூறிவந்தனர்.

அதே சமயம் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு தங்கங்களின் வேலை சம்பந்தமாக சென்ற போதும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒன்றாக தங்கி இருந்தனர் என்று கூறப்பட்டது. மேலும் மகன்களின் பள்ளி நிகழ்ச்சியிலும் அவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர் அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆகியது.

இவர்கள் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்து இருந்தாலும் அடுத்த கட்ட பிரிவை நோக்கி அவர்கள் நகரவே இல்லை என கூறப்படுகிறது. மேலும் பிரபல தயாரிப்பாளர் கலைபுலி தானு அவர்கள் இருவரிடமும் ஒன்று சேர்வது குறித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விவாகரத்து பெற்ற தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து தனுஷும் சரி ஐஸ்வர்யா அவர்களும் சரி எந்த ஒரு அறிவிப்பையும் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

Leave a Comment