இயக்குனரை கொஞ்சம் கூட மதிக்காத ஐஸ்வர்யா மற்றும் திரிஷா.! வெளிவந்த தகவல்

மணிரத்னம் இயக்கத்தில்  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பண்ணிகளை படகுழு விறுவிறுப்பாக நத்தி வருகிறது. மேலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையே மணிரத்தினம் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, உள்ளிட்டோர் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் தஞ்சை பெரிய கோவிலை பற்றியும் ராஜராஜ சோழனை பற்றியும் பேசியது ரசிகர்களை கவர்ந்து விட்டது.

கதையின் படி பார்த்தால் குந்தவைக்கும் நந்தினி தேவிக்கும் இடையே ஆகாது ஆனால் படப்பிடிப்பின் போது குந்தவை திரிஷாவும், நந்தினி ஐஸ்வர்யா ராயும் சிரித்து பேசி இருக்கிறார்கள் இதை பார்த்த மணிரத்தினமும் கதாபாத்திரமாகவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீங்கள் இருவரும் சிரித்து பேசவே கூடாது என்று திட்டி இருக்கிறார்.

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகை திரிஷாவும், ஐஸ்வர்யா ராயும் அதையும் தாண்டி குந்தவையும், நந்தினி தேவியும் செல்பி எடுத்து இருக்கிறார்கள் படப்பிடிப்பு தளத்தில் குந்தவை, நந்தினி கெட்டப்பில் அவர்கள் எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரல் ஆகிவிட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள்  சோழர்கள் காலத்தில் ஏது செல் போன் என்று கேட்டு மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டார்கள்.

இதைப் பார்த்த மணிரத்தினம் என்ன செய்வதென்றே தெரியாமல் தற்போது இவர்களை திட்டியும் பிரயோஜனம் இல்லை என்று கூறிவிட்டு அவருடைய வேலையை பார்க்க தொடங்கி விட்டார்.

Leave a Comment