பாகுபலி போல பிரமாண்ட வசூலை குறிவைக்கும்.? சூப்பர் ஸ்டார் திரைப்படம்.! உன்னால முடியும் வா.. தலைவா.

சமீபகாலமாக மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் அந்த மொழியையும் தாண்டி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்துவது வழக்கம். அதற்கு அடிக்கல் ஊன்றியது என்னமோ ராஜமௌலி படைப்பில் வெளியான பாகுபலி சீரிஸ் தான்.

முதல் பாகம் 800 கோடியை கிட்டத்தட்ட வசூல் செய்து இருந்தாலும் இரண்டாம் பாகம் சுமார் 1000கோடி மேல் வசூல் செய்தது இந்த திரைப்படத்தின் வசூல் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் கிட்ட கூட நெருங்காத நிலையில் தற்போது பாகுபலி படத்தைப் போல ஒரு சூப்பரான ஐடியா வைத்துள்ளது தெலுங்கு சினிமா படக்குழு.

தெலுங்கு சினிமாவில் தற்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அல்லி அர்ஜுன்னனுக்கு நல்லதொரு ரசிகர்கள் கூட்டம் தெலுங்கு சினிமாவையும் தாண்டி மலையாளம் தமிழ் பக்கத்தில் இருக்கிறனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதனால் தற்போது அல்லி அர்ஜுன் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானால் பாகுபலி போன்ற ஒரு பிரம்மாண்ட வசூல் செய்யும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் புஷ்பா. இத்திரைப்படம் முதலில் ஒரு பாகமாக வெளிவர இருந்த நிலையில் படத்தை சுருக்க முடியாததால் இரண்டு பாகங்களாக எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் தற்போது கூறியுள்ளார்.

இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியீட்டு நல்லதொரு வசூலை ஈட்ட தற்போது படக்குழு திட்டமிட்டுள்ளது இதனால் பாகுபலி போன்ற ஒரு பிரம்மாண்ட வசூல் செய்ய தற்போது படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.

Leave a Comment