ஒரு பிளானையும் ஒழுங்கா போட மாட்டியா என கௌதமை அடித்து குமுறும் சித்ரா தேவி!! பக்காவாக பிளான் போட்டு மாமியாரையே கௌத்த மகா.. .

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் சித்ராதேவி கௌதமை போட்டு அடிக்கிறாள். நீ ஒரு பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்ல இதுவரைக்கும் நீ செஞ்ச ஒரு வேலையும் உறுப்புட்டதுல என திட்டுகிறாள். கோடீஸ்வரி நடந்த அனைத்தையும் வீட்டில் தனது புருஷன் மற்றும் மகளிடம்  கூறுகிறார். அதனைத் தொடர்ந்து மகா கோடீஸ்வரிக்கு போன் பண்ணி கிருஷ்ணமூர்த்தி அங்கிள் வீட்டுக்கு வந்து பணத்தை செட்டில்  பண்ணிட்டாரு என சொல்கிறாள். அந்தப் பணத்தை வைத்து வீட்டை மீட்டு விடலாம் என கூறுகிறாள் . நாளைக்கு மகா சிவராத்திரி அதனால எங்க வீட்ல பூஜை இருக்கு நீங்க வந்தீங்கன்னா  சாமி கும்பிட்டுட்டு சூர்யா கையாலே அந்த பத்திரத்தையும் வாங்கிட்டு போகலாம் என மகா கோடிஸ்வரிடம் கூறுகிறாள்.

அதற்கு கோடீஸ்வரியோ வீட்டை மீட்டு வீட்டு பத்திரத்தை நீ வச்சுக்கோ உன்கிட்ட இருந்தாலும் என்கிட்ட இருந்தாலும் ஒன்னு தான் நான் அங்க வரல உன் மாமியார் ஏற்கனவே சிலை கடத்தல் மேட்டர்ல மாப்பிள்ளை எங்களுக்கு உதவி செய்ய வந்த அப்ப ஏதாவது ஆயிருந்தா என்ன ஆயிருக்கும்னு  பயந்தாங்க அதை மனசுல வச்சிக்கிட்டு நாங்க இப்போ வந்தோம்னா கோவமா இருப்பாங்க நாங்க அங்க வரல என சொல்கிறார். உடனே மகா ஒரு பிளான் போட்டு அவங்க மாமியாரையே அவங்க அம்மா கிட்ட பேச வச்சு பூஜைக்கு அழைக்க வக்கிறாங்க. அதனால கோடீஸ்வரியும் குடும்பத்தோட வரேன்னு ஒத்துக்குறாங்க. 

அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா மகா சிவராத்திரி பூஜைக்காக தன்னை அலங்காரப்படுத்திக் கொள்கிறாள். இந்த புடவையில் நம்ப ரொம்ப அழகா இருக்கோமே என பேசிக்கொண்டு ஆனால் இந்த துணி மூட்டைய வைத்துல கட்டி நம்ம அழகையே கெடுத்துக்கிட்டோம். இதுக்கு சீக்கிரமா ஒரு முடிவு கட்டணும் என தனக்குள்ளேயே பேசிவிட்டு பூஜை அறைக்கு போகிறாள். 

மகா சிவராத்திரி  பூஜைக்காக பூஜை பண்ண ஆரம்பிக்கின்றார். அப்போது மகாவின் நெற்றியில் பொட்டு இல்லை உடனே அதை பார்த்த ராஜலட்சுமி பொட்டு வைக்கலையா போய் வச்சுக்கிட்டு வா என கூறுகிறார். அதற்கு மகா நான் பொட்டு வச்சிருந்தேன் கீழே விழுந்துடுச்சு போல என கூறுகிறாள். உடனே பாட்டி பூஜை அறையில் இருக்கும் குங்குமத்தை எடுத்து சூர்யா கிட்ட குடு அவன் வச்சு விடுவான் என சொல்கிறார். சூர்யாவும் மகாவிற்கு பொட்டு வைத்து விடுகிறார். அப்போது ராஜலட்சுமி அய்யோ நானே அவ ளுக்கு ஒரு வாய்ப்பு உருவாக்கி கொடுத்துட்டேனே என மனசுக்குள்ளேயே பேசி கொள்கிறாள்.

அதோடு மட்டுமில்லாமல் பாட்டி இன்னைக்கு ஒரு சிறப்பு அது ஏற்கனவே இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு தெரியும் புதுசா வந்த மருமகள்களுக்கு மட்டும்தான் தெரியாது.  அது என்னன்னா யார் யாருக்கு என்னென்ன ஆசை இருக்குங்குறத ஒரு பேப்பர்ல எழுதி இந்த கவர்ல வச்சு சாமிகிட்ட வச்சிட்டீங்கனா அது நடக்கும்ன்னு ஒரு நம்பிக்கை என கூறுகிறாள். மகா ஆவலாக என்ன எழுதப் போகிறார் என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.