சிலையை மீட்டு கொடுத்த சூர்யா!! உண்மை தெரியாமல் சந்தோஷத்தில் கௌதம்!! பிரக்னன்சி பெல்ட் வாங்கும் ஐஸ்வர்யா…

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பிரபா சிலையை கடத்தி சென்றவர்களை கண்டுபிடித்து அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சூர்யாவும் அங்கு வந்து விடுகிறார். அவர்களை அடித்து போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுகிறார்.

அவர்களிடமிருந்து சிலையை மீட்டு எடுத்து வந்து மாமனாரிடம் கொடுக்கிறார். அதை பார்த்ததும் அனைவரும் சந்தோஷமடைகின்றனர். கடவுள்தான் உங்களை இங்கு அனுப்பி வச்சிருக்காரு நீங்க இல்லன்னா நாங்க  நடுத்தெருவுக்கு வந்திருப்போம் என சொல்லி கோடீஸ்வரி அழுவுகிறார்.

அவர்களைத் தொடர்ந்து  மகாவும் சூர்யாவுக்கு நன்றி சொல்லி கட்டி பிடித்து அழுகிறார். கிருஷ்ணசாமியும் சூர்யாவிற்கு நன்றி சொல்கிறார். உடனே மகாவின் அப்பா வந்து சூர்யாவை கூப்பிட்டு வாங்க மாப்பிள்ளை சிலையை படைத்து விட்டு டெலிவரி பண்ணலாம் என கூப்பிடுகிறார். உடனே சூர்யாவும் சென்று சிலைகளுக்கு பூஜை செய்கிறார்.

கதிர் அடிபட்டும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் வெறுத்து ஒதுக்கும் பாண்டியன்.! ராஜிக்கு தெரிய வரும் உண்மை..

அடுத்த சீனில்  ஐஸ்வர்யா தான் மாசமாக இருப்பதை நம்ப வைப்பதற்காக வயிறு பெரிதாக தெரிவதற்கு ஒரு பெல்ட்டை வாங்குகிறார். ரூமில் போய் அதை போட்டு பார்க்க அப்போது வேலைக்காரி வந்து ரூமை கிளீன் பண்ணுகிறாள். அந்த சமயத்தில் அவள் போர்வை இழக்கும் போது அந்த பெல்ட் தெரிகிறது. ஆனால் வேலைக்காரி அதை கவனிக்கவில்லை. அதே சமயத்தில் அங்கே  கௌதம் வருகிறார் அவரும் அதை கவனிக்கவில்லை நல்லவேளை நான் மாட்டிக்கு இருந்தேன் இந்த வேலைக்காரி இப்படி பண்ணிட்டாலே என திட்டிக்கிட்டு ஐஸ்வர்யா அந்த பெல்டை ஒலிய வைக்கிறாள்.

அடுத்த சீனில் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது ராஜலட்சுமி சூர்யா இன்னும் வரவில்லை என கோபமாக அங்கும் இங்கும் நடக்கிறாள். அந்த நேரம் பார்த்து  கௌதம் மற்றும் சித்ராதேவி இருவரும் சந்தோஷமாக உள்ளனர். அதாவது சிலை திருடு போயிருக்கும் மகா குடும்பம் நடுரோட்டிற்கு வந்திருக்கும் என சந்தோஷத்தில்  உட்கார்ந்து இருக்கின்றனர். அந்த விஷயத்தை வந்து சூர்யாவும் மகாவும் எப்ப சொல்லுவாங்க என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  அந்த சமயத்தில் சூர்யாவும் மகாவும் அங்கு வருகின்றனர். உடனே ராஜலட்சுமி கோபமாகி நேத்து நைட்டே வர வேண்டிய நீங்க ஏன் இப்பதான் வரீங்க என மகாவை கேட்கிறாள். அதுமட்டுமில்லாமல் நைட்டு வர முடியலன்னா  எங்க கிட்ட சொல்லனும்ல அதுவும் சொல்லல என ராஜலட்சுமி மகாவை முறைத்தபடி கேள்வி கேட்கிறார்.

ஆபீசை மூடியாச்சு என்ற உண்மையை சொன்ன ராதிகா!!! மீண்டும் பாக்யாவை எதிர்க்கும் ராதிகா, கோபி!! எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

அதற்கு சூர்யா பதில் சொல்ல வாய் திறக்குகிறார். அப்போது ராஜலட்சுமி நீ வாய மூடு நான் மகாவ தான் கேட்கிறேன் என சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Exit mobile version