சித்ராதேவியையே மிஞ்சும் அளவிற்கு வில்லியாக இருக்கும் அனாமிகா!! விஜய் தப்பிப்பாரா மாட்டுவாரா.. ஆஹா கல்யாணம்.

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பூஜைக்காக அனைவரும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சோபாவில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர், உடனே மகா போய் பயம் காட்டுவது போல எழுப்புகிறார். அதற்கு சூர்யா என்ன விளையாடுற என கேட்க அங்க பாருங்க உங்கள பாத்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க என சொல்கிறாள்.

உடனே விளையாண்டு ஜெயிச்ச களைப்பு அதான் தூங்கிட்டேன் என சொல்லிவிட்டு இருவரும் பூஜை செய்ய ஆரம்பிக்கின்றனர். அப்போது பாட்டி மகாவை பாட்டு பாட சொல்கிறார். பூஜை முடிந்ததும்  டான்ஸ் போட்டி இருக்கு என சொல்லி விஜய் அனைவரையும் கூப்பிட்டு போகிறார்.

முதலில் விஜய் நான் தான் டான்ஸ் ஆட போறேன் என்னோட ப்ரோ தான் டான்ஸ் ஆட போறாங்க என சொல்கிறார். போன கேம்ல அனாமிகா கூட சேர்ந்து விளையாடுனதாலதான் நான் ஜெயிக்கல, உன்னோட சேர்ந்து விளையாடி இருந்தால் ஜெயிச்சிருப்பேன் என சொல்லி பிரபாவை கூப்பிடுகிறார். பிரபா வர மறுக்கிறார். ஆனால் விஜய் விடாமல் கையை பிடித்து இழுத்து மேடைக்கு கூப்பிட்டு போகிறார்.இதை அனைத்தையும் அனாமிகா பார்த்துவிட்டு வந்து நான்தான் உன் கூட டான்ஸ் ஆடுவேன் ப்ரோ நீங்க ஆட வேண்டாம் எங்களுக்கு இப்பதான் நிச்சயமாயிருக்கு  நாங்க ரெண்டு பேரும் தான் ஆடணும் என சொல்லி பிரபாவை கழட்டி விடுகிறார். அனாமிகாவும் அவங்க அம்மாவும் பிரபாவை எதிரியாக பார்க்கின்றனர். ஆனால் விஜய் வாங்க மூணு பேரும் சேர்ந்து டான்ஸ் ஆடலாம் என கூப்பிடுறார். ஆனால் பிரபா வேணாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார், பிரபா விஜய்யை காதலிக்கிறார், அதனால் நடப்பதை பார்த்து வருத்தப்படுகிறார் .

ஒவ்வொருவராக டான்ஸ் ஆடுகின்றனர், கடைசியாக சூர்யாவும் மகாவும் டான்ஸ் ஆடுகின்றனர். அதனை தொடர்ந்து மொத்த குடும்பமும் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறது அப்படி ஆடும் போது ஐஸ்வர்யா வயிற்றில் கட்டி வைத்திருந்த பேட் கீழே விழுந்து விடுகிறது.

உடனே அதை எடுத்துக் கொண்டு மகா ஐஸ்வர்யாவை தனியா அழைத்துச் சென்று என்ன பண்ற ஐஸ்வர்யா எனக் கேக்க, உடனே ஐஸ்வர்யா உனக்கு நான் சந்தோஷமா இருந்தா பிடிக்காதே, உனக்கு அறிவே இல்லையா என மகாவை திட்டுகிறார். அதற்கு மகா எனக்கு அறிவு இருக்கு உனக்கு அறிவு இருக்கா எங்க ஒன்  வயித்துல இருந்த பேடு என்ன கேட்கிறார். அதை தொடர்ந்து மகாவிடமிருந்து ஐஸ்வர்யா வாங்கிக் கொள்கிறார். 

மகா இன்னைக்கு எல்லாம் ஒன்னா தான் இருக்காங்க இந்த விஷயத்தை சொல்லிடு சொல்லி சாரி கேளு என சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவோ மகாவிடம் நீதான் எனக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்தன்னு நான் போய் சொல்லட்டுமா என சொல்லி மகாவை மிரட்டுகிறாள்.

சரி விடு நானே போய் சொல்லிட்றேன் என மகா சொல்ல நீ போய் சொன்னா நான் இங்கேயே செத்துடுவேன் என ஐஸ்வர்யா மகாவை மிரட்டுகிறாள். அதோடு மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா நம்ப இப்படியே நடிச்சிட்டு இருக்க முடியாது சீக்கிரமா அபார்ஷன் ஆயிடுச்சுன்னு ஒரு டிராமாவை போட வேண்டியதுதான் என மனசுக்குள்ளே பேசிக் கொள்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.