சூர்யா எழுதியது நடக்கணும் என வேண்டிக் கொள்ளும் மகா.. அது என்னங்கற உண்மை தெரிஞ்சா தாங்க மாட்டிங்க மகா..ஆஹா கல்யாணம்.

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் விரும்பியதை பேப்பரில் எழுதி சாமிக்கு முன் வைத்தால் நடக்கும்  என பாட்டி கூறியதால் அனைவரும் விழுந்து விழுந்து காப்பி அடித்து  தனது மனதில் இருக்கும்  விஷயங்கள் நடக்க வேண்டும் என எழுதிக் கொண்டிருக்கின்றனர். எழுதி முடித்துவிட்டு அனைவரும் சாமியின் முன்பு வந்து ஒவ்வொருவராக பௌலில் வைக்கின்றனர்.

மகா எழுதும்போது சூர்யா இதுவரை சாமியிடம் எதுவும் கேட்டதில்லை ஆனால் இப்போது எதையோ வேண்டி எழுதுகிறார். அவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கணும் என மகா வேண்டி எழுதுகிறார்.

மேலும் அடுத்த சீனில் மகா சூர்யா என்ன எழுதியுள்ளார் என பார்ப்பதற்காக சாமியிடம் என்ன மன்னிச்சுக்கோங்க அவர் என்ன எழுதியிருக்கார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்லிவிட்டு  பேப்பரை எடுக்கப் படிக்க போகிறார். அப்போது விஜய் வந்து அண்ணி என கூப்பிடுகிறார். உடனே மகா பயந்து என்ன விஜய் எனக் கேட்கிறார். அதைப் பார்த்த விஜய் ஏன் பயப்படுறீங்க என கேட்க உடனே மகா அதெல்லாம் ஒன்னும் இல்ல என சமாளித்து விடுகிறார்.

பிறகு விஜய் மகாவிடம்  இன்னைக்கு அனாமிகா வீட்டிலிருந்து வராங்க. அதோட எங்க கல்யாணத்தை பத்தியும் பேச போறாங்க எனக் கூறுகிறார். அதற்கு உடனே மகா சந்தோஷப் படுகிறார், வரட்டும் நம்ம வீட்ல ஏற்கனவே எல்லாத்துக்கும் நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு ஓரளவுக்கு தெரியும். அதனால ஒத்துப்பாங்க அப்படி இல்லன்னா நான் பேசுறேன் உனக்காக என மகா கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து மகாவின் அப்பா, அம்மா, தங்கச்சி என அனைவரும் வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் ராஜலட்சுமி வாங்க என கூறுகிறார். சித்ராதேவி கோடிஸ்வரியை  ரொம்ப நக்கலாக பேசுகிறார். உடனே மகா சித்ரா தேவியை மூக்கு உடைப்பது போல் பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து அனாமிகாவின் குடும்பத்தினர் வருகின்றனர். உடனே மகா அவர்களை வீட்டுக்குள் வாங்க என அழைத்து வருகிறார். அனாமிகாவும் விஜயும்  பக்கத்து பக்கத்துல ஒரே சோபால உக்காந்து இருக்கின்றனர். அப்போது இருவரும் மாத்தி மாத்தி நீ சொல்லு நீ முதல்ல சொல்லு என பேசிக்கொள்கின்றனர். உடனே தாத்தா என்ன எக்சிபிசன்ல உட்கார்ந்து இருக்க மாதிரி நீங்க ரெண்டு பேரும் நடுவுல உட்கார்ந்துகிட்டு மாத்தி மாத்தி பேசிக்கிறீங்க நாங்க இருக்கிறத  மறந்துட்டீங்களா என கேட்கிறார்.

உடனே அனாமிகாவின் அப்பா, அம்மா சின்னஞ்சிறுசுங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டாங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும் அத பத்தி தான் உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு வந்தோம் என கூறுகின்றனர். நல்ல வேலை இன்னைக்கு உங்க வீட்ல பூஜையாவும் இருக்கு என கூறுகிறார். இவர்களின் கல்யாணத்தைப் பற்றி பேசும் போது மஹாவின் தங்கச்சி ப்ரோ கஷ்டப்படுகிறார்.

அதோடு சித்ராதேவி மகாவை அசிங்கப்படுத்துவது போல அனாமிகாவின் குடும்பத்தார் முன்பு பேசுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.