தாத்தாவிடம் உண்மையை கூறிய மகா.. எழுந்ததும் சூர்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அதுக்கு அப்பவே சரி சொல்லியிருக்கலாமே..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் அனைவரும் ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அனாமிகா கிளம்புகிறாள். உடனே அவரை வழி அனுப்ப விஜயும் செல்கிறார். சூர்யாவின் சித்தி மகாவிடம் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க ஸ்வீட் கொண்டு வந்து கொடு என சொல்கிறாள் . சூர்யா வேண்டாம் என வேகமாக சொல்கிறார் ஆனால் மகா ஸ்வீட் எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்கிறாள். ஸ்வீட்டை  சாப்பிட்டு விட்டு என்ன இதுல இவ்ளோ உப்பு என கேட்கிறார்கள். உடனே மகா சூர்யா தான் சர்க்கரை போட்டார் என சொல்கிறாள்.

பின்னர் அடுத்த சீனில் சூர்யா மகாவை தேடுகிறார் இதைப் பார்த்த விஜயின் சித்தி என்ன தேடுற என சூர்யாவிடம்  கேட்கிறார். நான் வேற யாரை தேடப் போறேன் மகாவை தான் என சொல்கிறார். இல்ல தலை வலிக்குது அதான் மகா கிட்ட காபி கேக்கணும் அதுக்கு தான் தேடுறேன் என  சொல்கிறார்.

உடனே சித்தி மகா தாத்தா ரூமுக்கு போய் இருக்கா என சொன்னதும் சூர்யா உடனே தாத்தா ரூமுக்கு போய் மஹாவிடம் நீ ஏன் இங்க வந்த என கேட்க அதற்கு மகா தாத்தாவுக்கு மாத்திரை கொடுக்க வந்தேன். அது மட்டும் இல்லாம தாத்தா கிட்ட ஒன்னு பேசணும் அதான் அதெல்லாம் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் என சூர்யா மகாவை பேசவிடாமல் தடுக்கிறார். தாத்தா என்ன என கேட்க அதற்கு மகா இவர்களுக்கு இடையில் நடந்த சண்டையை பற்றி சொல்லாமல்  இவர்தான் கேசரியில உப்பு அள்ளி போட்டார் தாத்தா என மாத்தி சொல்லிவிடுகிறார்.

பின்னர் மகா தாத்தாவிற்கு மாத்திரை கொடுக்கும்போது என்ன எப்பவும் மூணு மாத்திரை தான் கொடுப்போம் இப்ப நான்கு மாத்திரை இருக்கு என தாத்தாவிடம் கேட்கிறார். அதற்கு தாத்தா இல்ல வைட்டமின் மாத்திரை என சொல்லி மழுப்புகிறார்.

பின்னர் மகா தனது ரூமுக்கு போய்  சூர்யாவிடம் அது வைட்டமின் மாத்திரை போல தெரியல வேற ஏதோ மாத்திரை போல இருக்கு என சந்தேகப்பட்டு கேட்கிறாள். அதற்கு சூர்யா நீ என்ன டாக்டரா அது வைட்டமின் மாத்திரை தான் என சொல்லுகிறான். 

பின்னர் சூர்யா மகாவிடம் ஏன் ஹிஸ்டரியிலேயே நடக்காத ஒரு விஷயத்தை நான் இன்னைக்கு பண்ண போறேன் என சொல்கிறான். அது என்னவென சர்ப்ரைஸ் வைக்காம சீக்கிரமா சொல்லுங்க என மகா கேட்கிறார். அதற்கு சூர்யா நான் இன்னைக்கு உனக்கு தேங்க்ஸ் சொல்லலாம்னு இருக்கேன். எதுக்கு தேங்க்ஸ் என மகா கேட்கிறாள் அதற்கு சூர்யா நீ தாத்தா கிட்ட நம்ம சண்டை போட்டுக்கிட்டதை சொல்லல அதுக்கு தான் என சொல்கிறான். உங்க தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம் சாரி தான் சொல்ல  வேண்டும். அதற்கு மகா தாத்தாக்கு உடம்பு சரி இல்ல அதனால இன்னைக்கு சொல்லல நாளைக்கு இல்ல அடுத்த நாள் என எப்ப வேணாலும் சொல்லுவேன் என சொல்கிறாள்.

உடனே அதற்கு சாரி எல்லாம் சொல்ல முடியாது என சூர்யா சொல்கிறார். பிறகு படுக்கப் போகிறார்கள் அப்போது சூர்யாவிற்கு தூக்கம் வரவில்லை உடனே யூடியூபில் வீடியோவை பார்க்கிறார். அந்த வீடியோவில் கெட்ட கெட்ட கனவு வந்தால் அந்த கனவில் உங்களது மனைவி ராட்சசி போல தெரிந்தால் இந்த யோகாவை செய்யுங்கள் ராட்சசி போல உள்ள உங்கள் மனைவி தேவதையாக தெரிவால் என சொல்கின்றார் உடனே சூர்யாவும் அதேபோல செய்கிறார் கை முதுகுக்கு பின்னால் லாக் ஆகிவிடுகிறது. சூர்யா மகாவிடம் கையை எடுத்து விடு என கேட்கிறார். அதற்கு மகா சாரி கேட்டால் தான் எடுத்து விடுவேன் என  சொல்கிறார். உடனே சூர்யாவும் வேறு வழி இல்லாமல் சாரி கேட்கிறார் பின்பு  மஹா கையை எடுத்து விடுகிறாள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.