அட, அர்ஜுன் மகளா இப்படி ஒரு தொழிலை ஆரம்பித்தது.! வாழ்த்தும் பிரபலங்கள்..

பொதுவாக சினிமா பிரபலங்கள் சினிமாவில் தங்களுடைய ஆதிக்கம் மிகவும் நன்றாக இருந்து வரும் நிலையில் அவப்பொழுது தங்களுடைய வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி பிரபலமடைய செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.

தற்பொழுது உலகில் ஏராளமான புது பிசினஸ்கள் டெவலப்பாகி வருகின்றது அந்த வகையில் தற்பொழுது ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கு புது பிசினஸை தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் ஐஸ்வர்யா திரையுலகில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவருடைய இரண்டாவது மகள் அஞ்சனா சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாத காரணத்தினால் தொழிலதிபராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

arjun 3

அந்த வகையில் அஞ்சனா புதிதாக பெண்களுக்கான ஹேண்ட் பேக் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்கியுள்ளார். உலகில் பல ஹேண்ட் பேக் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தாலும் முதன் முறையாக இவர் பழ தோலை வைத்து ஹேண்ட் பேக் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். இவ்வாறு இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் அர்ஜுன் மகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

arjun 2

மேலும் இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு பல தோலை வைத்து ஹேண்ட் பேக் தயாரிப்பதன் மூலம் ஓரளவுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடுகளையும் குறைக்கலாம் மேலும் பலருக்கும் இது போன்ற வித்தியாசமான ஹேண்ட் பேக்குகள் மிகவும் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

arjun 1

Leave a Comment

Exit mobile version