மீண்டும் சுமார் மூஞ்சி குமாராக களமிறங்கும் விஜய் சேதுபதி.! வேலைக்கு ஆகுமா.?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கவர்ந்தவர், சமீபகாலமாக விஜய் சேதுபதிக்கு பெரிய ஹிட் திரைப்படம் ஒன்றும் அமையவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதி ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

2013ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்த திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் விஜய் நந்திதா ஸ்வேதா, டேனியல், சுவாதி ரெட்டி, பசுபதி, அஸ்வின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

படத்தில் விஜய் சேதுபதி சுமார் மூஞ்சி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பின்னர் காஷ்மோரா, ஜூங்கா ஆகிய திரைப்படங்களை இயக்கிய கோகுல் தற்பொழுது கொரோனா குமார் என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

அதேபோல் இந்த திரைப்படத்தில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் சுமார் மூஞ்சி குமார் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தது போல் இந்த திரைப்படத்திலும் சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் ஒன்று கொரோனாவில் மாட்டிக்கொண்டு தவிப்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது, மேலும் சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சதீஷ் தான் தயாரிக்கிறார், மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகளின் விவரங்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள், இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment