குடிமகன்களுக்கு இன்ப செய்தி.! இதோ அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி படிப்படியாக இந்தியாவிலும் பரவி வருகிறது, அதே போல் தமிழகத்திலும் மிக வேகமாக கொரோன வைரஸ் பரவி வருகிறது, இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த 144 தடை விதிக்கப்பட்டது கடைபிடிக்கப்பட்டு வந்தது.

அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தார்கள், ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மால்கள் மதுபான கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது, அதேபோல் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மதுபான கடையை திறக்க அனுமதி அளித்துள்ளது, அதாவது தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மதுபான கடைகளை மே 7-ஆம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பொதுமக்களுக்கு கொஞ்சம் அச்சம் வந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version