மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் அபிஷேக்.! எதற்காக தெரியுமா.?

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி இல் முதல் இடம் பிடிப்பதற்காக புதிய புதிய நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோ என பரபரப்பாக ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி நீண்ட காலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த வருடம் 5 வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கை மாரிமுத்து கலந்து கொண்டார். ஆனால் சில பிரச்சினை காரணமாக இவர் முதலில் வெளியேறினர் இதனை தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, நட்யா சாங் என பல போட்டியாளர்கள் வெளியே சென்ற நிலையில் தற்பொழுது மீதமுள்ள போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் ஆரம்பத்திலிருந்தே மற்ற போட்டியாளர்களை தனது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பல சதித் திட்டங்களை தீட்டினார் இது போட்டியாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் பார்வையாளர்களை வெறுப்படையச் செய்தது அதனால் இதற்கு இரண்டாவதாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து செல்வதற்கு முன்பே பார்வையாளர்களிடம் கெட்ட பெயரை எடுத்து இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நான் பிக்பாஸ் பார்த்ததே கிடையாது என கூறினார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு அபிஷேக் வெளியேறியதற்கு காரணம் குறைந்த வாக்குகள் மட்டுமே காரணம் என ஒருபக்கம் கூறப்பட்டாலும். பிக்பாஸ் வீட்டிற்குள் பரபரப்பு இல்லை என்பதால் மீண்டும் அபிஷேக் அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதற்கு பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

abishek

ஏனென்றால் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முதலில் வனிதாவை வெளியேற்றப்பட்டு விட்டு மீண்டும் உள்ளே அனுப்பினார்கள் பிக் பாஸ் குழு. அதனால் மீண்டும் அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்குள் கூடிய விரைவில் செல்வார் என கூறப்படுகிறது. இவர் வீட்டிற்கு சென்றால் பிக்பாஸ் வீட்டில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என தெரிய வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் அபிஷேக்கை உள்ளே அனுப்ப பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment

Exit mobile version