மாநாடு திரைப்படத்தை பார்த்துவிட்டு வெங்கட்பிரபு,சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர்களுக்கு எல்லாம் குரு என்று கூட கூறலாம் இவரது நடிப்பை பார்ப்பதற்காகவே அந்த காலத்தில் இவருக்கு ரசிகர்களும் அதிகமாக இருக்கிறார்கள். இவரது நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் திரை அரங்கமே அதிரும் அளவிற்கு இவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்களாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ்,மீனா,குஷ்பூ போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நன்றாகவே வசூல் செய்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப்படத்தை விட மற்ற நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் நன்றாக இருந்தால் உடனே போன் செய்தோ அல்லது நேரில் சந்தித்து பாராட்டி விடுவார்.அதைப்போல் அண்மையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட்பிரபு மட்டும் சிம்புவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

மாநாடு திரைப்படம் ஒரு வித்தியாசமான முறையில் இருந்ததால் பல பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபுவை பாராட்டி வந்தார்கள்.இந்த திரைப்படத்தில் சிம்புவை விட எஸ்.ஜே சூர்யா அவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக நடித்திருந்தார் இவரது நடிப்பு இந்த திரைப்படத்தில் தனியாக தெரிந்திருக்கும்.

மேலும் சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவை பாராட்டிய ரஜினி போன் செய்து நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களையும் பாராட்டினாராம் இதனை எஸ்.ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment