விஜய் அடுத்து எனக்கு பிடித்த இரண்டு நடிகர்கள் இவர்கள்தான் – வலிமை படம் பார்க்க வராதது குறித்து பேசிய எஸ் ஏ சந்திரசேகர்.!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர். சினிமாவுலகில் தற்போது பெரிய அளவு படங்களை இயக்கவில்லை என்றாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் வெளிவரும் நல்ல படங்களை பார்த்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் டாப் நடிகர்கள் படங்கள் எல்லாம் எப்போது வருகிறதோ அப்போதெல்லாம் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துவிட்டு பட குழுவினரையும் நடிகர்களையும் பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அஜித்தின் வலிமை படத்தை இதுவரை திரையரங்கில் அவர் பார்க்கவே இல்லையாம்.

காரணம் சமீப காலமாக விஜய்க்கும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தது தற்போது அமைதியாக இருக்கிறது. இப்போது  வலிமை திரைப்படத்தை பார்த்து வந்தால் எதையாவது சொல்லி விடும் என்ற காரணத்தினால் தற்போது அதை தவிர்த்து உள்ளதாக கூறியுள்ளார்.

சந்திரசேகருக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் முதன்மையானவராக இருப்பவர் அவரது மகன் விஜய் அடுத்ததாக அவருக்கு பிடித்த நடிகர்களில் யார் என்று பார்த்தால் அஜித் அதன்பிறகு ரொம்ப பிடித்தது தனுசை பிடிக்கும் என அவரே கூறியுள்ளார்.

ஏனென்றால் இவர்கள் அனைவரும் உதட்டில் இன்னொரு வார்த்தை வைத்து பேசக் கூடியவர்கள் அல்ல அந்த பண்பு தான் என்னை கவர்ந்து இழுத்ததாக அவர் கூறி உள்ளார். இவர்களது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் அது போலவே அந்த திரைப்படமும் நிச்சயம் மக்களை கொண்டாட வைக்கும் என சொல்லி உள்ளார்.

Leave a Comment