பில்லா படத்துக்கு பிறகு பிகினி டிரெஸ்ஸில் நடிக்கும் நயன்தாரா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தகவல்

சினிமா உலகில் ஆரம்பத்தில் கிளாமர் காட்டிய நடிகைகள் பலரும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு கிளாமர் காட்ட விரும்ப மாட்டார்கள் அப்படித்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் ஆரம்பத்தில் படும் கிளாமராக நடித்து வந்தார் குறிப்பாக பில்லா படத்தில் இவருடைய கிளாமர் பெரிய அளவில் பேசப்பட்டதோடு..

மட்டுமல்லாமல் அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய பிளஸ் ஆகவும் இருந்தது. அதன் பிறகு வில்லு படத்தில் பெரிய அளவில் கிளாமர் காட்டியிருந்தார் ஒரு கட்டத்திற்கு மேல் சுத்தமாக கிளாமர் காட்டவே இல்லை..  முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் போது கூட கிளாமர் காட்டுவதை பெரிதும் தவிர்த்து வந்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு சுத்தமாக கிளாமர் பக்கமே திரும்பவில்லை. மேலும் கிளாமர் இல்லாத கதையையே பெரிதும் தேர்வு செய்து நடித்து வந்தார் இது நயன்தாரா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் அவர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது திருமணத்திற்கு பிறகு நயன்தாரா பெரிய அளவில் கிராமர் காட்டி ஒரு படத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளி வருகின்றன அந்த படம் வேறு எதுவும் அல்ல அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா அதிக கிளாமர் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பிகினிக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா வந்துள்ளார் என செய்திகள் உலா வருகின்றன. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பில்லா படத்திற்கு பிறகு இப்பொழுது தான் பிக்னிக் டிரஸில் நடிக்கிறார் எனக் கூறி நயன்தாரா ரசிகர்கள் கமெண்ட்  அடித்து வருகின்றனர் இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..

nayanthara
nayanthara

Leave a Comment