கணவரின் இறப்பிற்கு பிறகு முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற மீனா.!

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து கலக்கி வந்தவர் தான் நடிகை மீனா இவருடைய கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் மீனா அதே சோகத்தில் இருந்து வந்தார் எனவே இவரை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமென இவருடைய தோழிகள் பலரும் முயற்சி செய்து வந்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது மீனா சோகத்தில் இருந்து மீண்டு வருகிறார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் மீனா இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியதால் குணசேத்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா நடித்திருந்தார் பல வருடங்களுக்குப் பிறகு மீனா மற்றும் ரஜினி கூட்டணியில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

meena 1
meena 1

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியர் வித்தியா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார் அந்த வகையில் மீனாவின் மகள் நைனிகா விஜயுடன் இணைந்து தெறி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இப்படிப்பட்ட நிலையில் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.

meena 2
meena 2

இது மீனாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது இந்த இழப்பிலிருந்து மீனாவை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவருடைய நண்பர்கள் பல முயற்சிகளை செய்து வந்தனர். தற்பொழுது தான் மீனா கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அந்த வகையில் சமீப காலங்களாக இவர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் மீனா மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்த சமீபத்தில் தன்னுடைய கணவரின் இறப்பிற்கு பிறகு மீனா முதன்முறையாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Leave a Comment