நயன்தாராவுக்கு பிறகாக பீகார் பிகரை உஷார் செய்த பிரபுதேவா..! திருமணமே முடிஞ்சு போச்சாம்..!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் நடிகர் தான் பிரபுதேவா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறந்த நடன ஆசிரியர் மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்துடன் கொண்டவர் அந்த வகையில் நடிகர் பிரபுதேவா அவர்கள்  சமீபத்தில் மை டியர் பூதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி குழந்தைகளை வெகுவாக கவர்ந்து விட்டது என்று சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது பிரபுதேவா கைவசம் வினோதன் பகிரா போன்ற திரைப்படங்கள் உள்ளது. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் 1995 ஆம் ஆண்டு ராம்லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இந்த திருமணத்தின் மூலம் பிரபு தேவாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தது அதில்  பிரபுதேவாவின் முதல் மகன் அவருடைய 12 வயதில் 2008 ஆம் ஆண்டு காலமானார்.

அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவிற்கு நயன்தாராவின் மீது காதல் மலர்ந்தது இந்த காதல் திருமணம் வரை சென்றது இதனால் நடிகர் பிரபுதேவா அவர்கள் தன்னுடைய மனைவியை கூட விவாகரத்து செய்தார் ஆனால் இந்த திருமணம் கைகூடவில்லை பின்னர்  நடிகர் பிரபுதேவா அவர்கள் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் நயன்தாராவோ இயக்குனர் விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டார் இப்படி ஒரு சூழ்நிலையில்  நடிகர் பிரபுதேவாவும் சமீபத்தில் தன்னுடைய உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இதற்கு எந்த ஒரு விளக்கமும் பிரபு தேவா கொடுக்கவில்லை.

இன் நிலையில் பிரபுதேவாவிற்கு பீகார் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கும் தகவலை பேட்டி ஒன்றில் ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள் கூறிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. பொதுவாக பிரபலங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருபவர் தான் ஜெயந்தி கண்ணப்பன் இவர் அன்மையில் பத்திரிக்கையில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் பிரபு தேவா திருமணம் முதல் குறித்தும் பேசி உள்ளார்.

அந்த வகையில் பிரபுதேவா அவர்கள் ராம்லதா என்ற பெண்ணை காதலிக்கிறேன்  என்று அவரை இரவு நேரத்தில் அழைத்து வந்து என்னிடம் கூறினார் அவர் வேறு யாரும் கிடையாது குஷ்பூ நடனமாடிய எட்டு பட்டி ராசா பாட்டில் கூட ராம்லதா அவர்கள் முதல் வரிசையில் நடனம் ஆடி இருப்பார் இவரும் சிறந்த நடன கலைஞர் என்றே சொல்லலாம்.

அதேபோல நடிகர் பிரபுதேவாவிற்கு பீகாரைச் சேர்ந்த டாக்டர் ஹீ மானி என்பவருடன் காதல் ஏற்பட்டு உள்ளது அந்த வகையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என செய்திகள் வெளிவந்த நிலையில் இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்தன அது மட்டும் இல்லாமல் இவை முழுக்க முழுக்க உண்மையான ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள் உறுதியாக கூறியுள்ளார். இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment