திருமணமாகி ஒரு நாள் கூட ஆகல வனிதாவின் கணவர் மீது முதல் மனைவி வழக்கு.! மூன்றாவது திருமணத்திலும் பிரச்சனையா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் முக்கிய நபர் என்றால் வனிதாவும் ஒருவர், இவர் ரொம்பவும் கோபக்காரர் வனிதாவின் அப்பா வேறுயாருமில்லை பல திரைப்படங்களில் நடித்த விஜயகுமார் தான். பிக்பாஸ் வீட்டிற்குள் சோகமாக வந்த வனிதா தன்னுடைய ஆக்ரோஷமான கேரக்டரை வெளிப்படுத்தினார்.

பிக்பாஸ் முடித்த பிறகு வனிதா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறார், வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்தவர் இவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோதிகா, ஜெயின்  என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் வீட்டிலேயே விமர்சையாக நடந்தது, தற்பொழுது வனிதாவுக்கும் 39 வயதாகும், பலரும் இந்த வயதில் மூன்றாவது திருமணமா என கமென்ட் செய்தார்கள் ஆனாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டார்,.

இவர்களின் திருமண புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது வனிதாவின் கணவர் பீட்டர் பால் வனிதாவின்  இரண்டு குழந்தைகளுக்கு கேக் மாறி மாறி ஊட்டிவிடும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது, இந்தநிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு ஆப்பு வைத்துவிட்டார் பீட்டர் பாலின் முதல் மனைவி.

பீட்டர் பால் மற்றும் அவரின் முதல் மனைவி ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள் இந்தநிலையில் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்துகொண்டார் ஆனால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெற்ற பிறகு வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார், தற்பொழுது அதையும் மீறி வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணத்திலும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருப்பதால் வனிதாவுக்கு மேலும் சோதனை காலம் வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment