நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகை..!வரவேற்கும் ரசிகர்கள்.

சினிமா உலகில் நடிக்க பல நடிகர் நடிகைகள் தற்போது ஏங்கி கொண்டிருக்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகைகள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா பக்கம் வராமல் போனதால் அவர்கள் அந்த வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் நல்ல நல்ல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பூமிகா. தமிழில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் அதிலும் குறிப்பாக விஜயுடன் கைகோர்த்து நடித்த பத்ரி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம் போன்ற படங்களும் இவருக்கு வெற்றி படங்கள் தான்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் தமிழை தாண்டி தெலுங்கு ஹிந்தி என ஒரு ரவுண்டு சுத்தி கொண்டு இருந்ததால் எந்த ஒரு மொழியிலும் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை பூமிகாவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை பின்பு அவர் திருமண விஷயத்தில் ஈடுபட்டார்.

அந்த வகையில் பரத்தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு முற்றிலுமாக ஒன்று இரண்டு வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டு குடும்பத்தை பார்க்க ஆரம்பித்தார். இவரது திறமை மற்றும் அழகை பார்த்து ஒன்னு ரெண்டு வாய்ப்புகள் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது அதனால் தன்னை நம்பி வந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

boomika

இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க உள்ளார் அந்த வகையில் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக உள்ள 30 வது படத்தில் ஜெயம் ரவிக்கு சகோதரியாக பூமிகா ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

Leave a Comment

Exit mobile version