ராஜா ராணிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாராவுடன் இணையும் ஜெய்..வைரலாகும் போஸ்டர் இதோ.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ராஜா ராணி இந்த திரைப்படத்தில் ஜெய்,நயன்தாரா,ஆர்யா, நஸ்ரியா,சந்தானம் உள்ளிட்ட நிறைய பிரபலங்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கொடுத்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் ஜெய் மற்றும் நயன்தாரா நடித்த கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கும் அந்த அளவிற்கு இருவரும் நடித்திருப்பார்கள் இதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய் நயன்தாராவுடன் இணைய இருக்கிறாராம்.

அதாவது நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் போன்ற பலமொழிகளில் தயாராக இருக்கிறது நயன்தாராவின் 75வது படம்.ஜெய் இணைந்துள்ளதாக போஸ்டர் ஒன்று படகுழு அறிவித்துள்ளது மேலும் இது ஜெய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக கொடுக்கும் சர்ப்ரைஸ் என பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த தகவலை அறிந்த ஒரு சில ரசிகர்கள் ராஜா ராணி திரைப்படம் மிகவும் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் அந்த திரைப்படத்தில் ஜெய் மற்றும் நயன்தாராவின் கதாபாத்திரம் மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் எப்படி இருவரின் கதாபாத்திரம் என்பது தெரியவில்லை.

அது மட்டும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருவது மட்டுமல்லாமல் பல வருடங்கள் கழித்து ஜெய் மற்றும் நயன்தாரா எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் இந்த போஸ்டரை பார்க்கும்பொழுது ஜெய் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

jai

அதாவது ஜெய் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமா அல்லது குணச்சித்திர வேடத்தில் நடிக்க போகிறாரா என பல விதமான கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் இந்த போஸ்டரை பார்த்துவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version