இவர் வந்த பிறகுதான் இந்திய அணி நிம்மதியா இருக்கு பிரபல வீரரை புகழ்ந்து பேசியே விராட்கோலி.! யார் அது தெரியுமா.?

இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையில் சூப்பர் 12ல் சுற்றில் விளையாடிக் கொண்டிருக்கிறது இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேறும் தற்போது இந்திய அணி கிட்டத்தட்ட தத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஏனென்றால் இனி இருக்கின்ற இரண்டு போட்டிகளிலும் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவினால் இந்திய அணி வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்ற இரு போட்டிகளில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற  வேண்டும் என்பதற்காக இந்திய அணி அடுத்து வருகின்ற போட்டிகளில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும் அப்படி பார்க்கையில் இன்று ஸ்காட்லாந்து அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த போட்டியில் மமுதலில் பேட்டிங் செய்தால் இந்திய அணி எடுத்த உடனே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது நல்ல விஷயம். இந்திய அணி ஆப்கானிஸ்தானை போட்டியில் துவக்கத்திலேயே அடித்து ஆட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் களம் இறங்கினோம் இதனை செய்து முடித்தும் நம்பிக்கையாக இருக்கிறோம்.

ashwin
ashwin

தொடர்ந்து இதேபோல் செயல்படுவோம் என்று எங்களுக்கு குறித்து கடைசி வாய்ப்பு என்பது எனக்கு கண்டிப்பாக தெரியும் நாங்கள் இனி நேர்மையான சிந்தனையுடன் சிறப்பாக  செயல்படுவோம் என தெரிவித்தார் மேலும் இந்திய அணி அஷ்வின் வந்து உள்ளது நல்ல விஷயம் என பார்க்கிறேன் அவர் மிகச்சிறந்த வீரர் IPL – ல் கூட சிறப்பாக செயல்பட்டுள்ளார். அஷ்வின் எதிரணியின் ரன் ரெட்டை கட்டுப்படுத்த உதவுகிறார் புகழ்ந்து பேசினார்.

Leave a Comment