ஏகே 62 திரைப்படத்தில் அருண் விஜய்யை தொடர்ந்து மேலும் ஒரு நடிகரை வில்லனாக களமிறக்கும் மகிழ் திருமேனி.! எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்…

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் புதிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்குவதாக இருந்தது ஆனால் விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு பிடிக்காததால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு இந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது இதனை தொடர்ந்து அஜித்திற்கு இயக்குனர் மகிழ் திருமேனி இரண்டு கதையை கூறி இருக்கிறாராம். அந்த வகையில் முதல் கதையை மகிழ் திருமேனி விஜய் இடம் கூறி இருக்கிறார் இந்த கதை விஜய் தரப்பு ஓகே செய்து இருக்கிறதாக கூறபடுகிறது.

அதேபோல மற்றொரு கதையை நடிகர் ஆர்யாவிடம் கூறியிருக்கிறாராம். அதன் பிறகு ஆர்யாவிற்காக எழுதப்பட்ட இந்த கதையில் தற்போது அஜித் அவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்யா தரப்பு சம்மதத்துடன் அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் ஏகே 62 படத்தின் அடுத்தகட்ட ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் அருண் விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது அதன் பிறகு அருள்நிதி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏகே 62 படத்தில் மேலும் ஒரு நடிகரை வில்லனாக போகிறார் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க பட குழுவுக்கு நடிகர் அஜித் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறாராம். அதாவது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் முதலில் வேறொரு திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களை தேர்வு செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் படக்குழு மிக தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment