ஏழு வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகரை வைத்து படத்தை இயக்கும் சூது கவ்வும் இயக்குனர்.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் நிலையில் கார்த்தி அடுத்ததாக நடிக்கப் போகும் திரைப்படம் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகி வைரளாகி வருகிறது.

நடிகை கார்த்தி விருமன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வம் வருகின்ற 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் வந்திய தேவன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து  மேலும் கார்த்தி கைவசம் சர்தார் ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் கார்த்தி நடிப்பில் தயாராகி வருகிறது.

இந்த நிலையில்  நடிகர் ஆர்யா நடிக்க வேண்டிய திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய சூது கவ்வும் திரைப்படத்தை இயக்கியவர் தான் நலன் குமாரசாமி இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும் என்று திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

சூது கவ்வும் திரைப்படத்தை பார்த்த கமலஹாசன் நவீன் குமாரசாமியை அழைத்து பார்வைட்டியதோடு மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பும் கொடுத்தார் அந்த திரைப்படம் திடீரென பிரேக்கப் ஆனது அதன் பிறகு நலன் குமாரசாமி காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மடோனா சப்ஸ்டியன் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க நலன் குமாரசாமி திட்டமிட்டார் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்திலிருந்து ஆர்யா விலகி விட்டார் அதன் பிறகு அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து அந்த திரைப்படத்தை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் நலன் குமாரசாமி.

நடிகை கார்த்தி நீண்ட நாட்களாக தன்னுடைய ஆஸ்தான தயாரிப்பில்  நடிக்காமல் இருந்து வந்தார் இந்த நிலையில் மீண்டும் ஆஸ்தான தயாரிப்பில் நடிக்க இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஏற்கனவே ஸ்டுடியோ கிரின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது அதனால் நடிகர் சூர்யா தன்னுடைய 42வது திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீனுக்கு கொடுத்துள்ளார் அந்த வகையில் தான் தற்பொழுது கார்த்தியும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் மேலும் நலன் குமாரசாமி ஏழு வருடத்திற்கு பிறகு இயக்க இருக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Comment