சூர்யா 40 – நந்தா திரைப்படத்திற்கு பிறகு இருபது வருடம் கழித்து மீண்டும் இணையும் பிரபலம்.! இனி படம் பட்டைய கிளப்பும்

சூர்யா நீண்டகலமாக மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்தார் அந்த வகையில் தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இதற்கான பணிகள் அனைத்தும் மிகவும் பரபரப்பாகவும் துரிதமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புத்தாண்டு தின சிறப்பு நாளான அன்று சூர்யாவின் ரசிகர்கள் இயக்குனர் பாண்டிராஜ் அவர்களிடம் சூர்யா 40 திரைப்படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் கொடுங்கள் என நச்சரித்து வந்துள்ளார்கள்.

அப்பொழுது இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா 40 திரைப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு முடிவடைந்தவுடன் இரண்டு முக்கிய கதாபாத்திரம் குறித்து அப்டேட் வெளியாகும் என கூறினார், இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு ராஜ்கிரண் மார்க்கெட் மீண்டும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது, இவர்கள் இருவரும் 20 வருடத்திற்கு முன்பு பாலா இயக்கத்தில் வெளியாகி வந்த நந்தா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் 20 வருடத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

rajkiran-surya movie

Leave a Comment

Exit mobile version