20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய சீரியலில் களமிறங்கும் மெட்டி ஒலி சாந்தி.!

வெள்ளித்திரை நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வருகிறதோ அதே போல சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சொல்லப்போனால் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளை தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பாகி பல வருடங்கள் முடிந்து இருந்தாலும் அந்த சீரியலில் நடித்துள்ள ஒரு சில நடிகைகளை பல வருடங்கள் ஆனாலும் மறுக்க முடியாத அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்டி ஒலி சீரியல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

அதுவும் இந்த சீரியலில் ஆரம்பிக்கும் பொழுது ஒளிபரப்பாகும் அம்மி அம்மி அம்மி மிதித்து இந்த  இப்பாடலில் நடனமாடி  பிரபலமடைந்தவர் தான் நடிகை சாந்தி. இவ்வாறு பிரபலமடைந்த இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களின் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

அந்த வகையில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற பாட்ஷா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆட்டோக்காரன் பாடலுக்கு குரூப் டான்ஸ் ஆடி இருப்பார். அதன் பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.

இவர் மற்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தாலும் சன்டிவியில் நடிக்கவில்லை எனவே தற்பொழுது 20 வருடங்கள் கழித்து மீண்டும் சன் டிவி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்தவகையில் சமீபத்தில் அறிமுகமான கண்ணான கண்ணே சீரியல் நேற்று என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment