விடாமுயற்சி : 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் அஜித்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ஒரு படம் முடிந்த உடனே எந்த ஒரு கேப்பும் விடாமல் அடுத்த படத்தில் கமிட்டாகின்றனர். அந்த வகையில் ரஜினி ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்.

கமல் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2, கல்கி போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். விஜய் லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடித்த வருகிறார் ஆனால் நடிகர் அஜித் மட்டும் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட வந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு மேலாகி இப்பொழுது தான் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.

மந்திரமும் இல்லை.. மாயமும் இல்லை.. விக்கெட் எடுத்தது குறித்து விளக்கம் கொடுத்த ஹர்திக் பாண்டியா

இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட வருகிறது இந்த நிலையில்  விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் அவர்கள் இயற்கை எழுதினார்.

இதற்கு பலரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் இந்த நேரத்தில் விடாமுயற்சி படம் குறித்து அந்தணன் பேசியது வைரலாகி வருகிறது. அவர் சொன்னது என்னவென்றால்.. விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள் திரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா என கூறினார்.

இந்த மாதத்தில் லியோ- வுடன் இத்தனை திரைப்படம் வெளியாகிறதா.? அப்போ வசூலுக்கு பாதிப்பு வருமா.?

நடிகர் அஜித்தும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும், அதில் ஒருவருக்கு திரிஷா ஜோடி என்றும், மற்றொரு அஜித்துக்கு ரெஜினா கசாண்ட்ரா ஜோடி என்றும் தெரிவித்துள்ளார்.  இதுவரை அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி அந்த வரிசையில் விடாமுயற்சி இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.  அசல் படத்துக்கு பிறகு இப்போ தான் நடிக்கயுள்ளார்.