11 வருடத்திற்கு பிறகு படத்தை இயக்கி நடிக்கும் பிரபல இயக்குனர்.! தாறுமாறாக இருக்கும் ஹீரோயினை தட்டி தூக்கிவிட்டார் பார்த்தீர்களா

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ஹரிகுமார். இவர் சினிமாவில் முதன் முதலாக நடன இயக்குனராக தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார் அதன் பிறகு தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹரிகுமார் மதுரை சம்பவம் தூத்துக்குடி ஆகிய திரைப்படங்களில் நடித்திருப்பார் இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்த திரைப்படத்தை தானே இயக்குவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ராம் ஜெய் புரோடக்சன் சார்பில் சக்தி குமார் தயாரிக்க இருக்கிறார்.

மேலும் ஹீரோவாக ஹரிகுமார் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் ஜான் விஜய் சக்திகுமார், சுபிக்ஷா, ஆகியவர்களும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள் படத்திற்கு கே வெங்கடேஷ் தான் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வகையில் விரைவில் படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிகுமார் வேறு யாரும் கிடையாது நடன இயக்குனராகவும்  நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் சிஷ்யன் தான் அதாவது பிரபுதேவா அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் ஹரிகுமார்.

தன்னுடைய குருவான பிரபுதேவா அவர்களை வைத்தே ஹரிகுமார் தேள் என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் சிறிது காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஹரிகுமார் தற்போது மீண்டும் படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த திரைப்படத்திற்கு  இன்னும் பெயர் வைக்கப்படவில்லை விரைவில் இந்த திரைப்படத்தின் முழு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

harikumar
harikumar

Leave a Comment