முதல் படத்திலேயே அதிதிக்கு அடித்த ஜாக்பாட்.! இனிமேல் இவர கையிலேயே பிடிக்க முடியாது..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார் கார்த்தி இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

முத்தையாவும் கார்த்தியும் இரண்டாவது முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளனர். இதற்கு முன்பாகவே இயக்குனர் முத்தையா கூட்டணியில்  கொம்பன் என்ற படமும் குடும்ப செண்டிமெண்ட்டை வைத்து உருவாக்கப்பட்டது. இந்த படம்  விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து மீண்டும் முத்தையா கூட்டணியில் உருவான விருமன் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை அதிதி சங்கர்.

அறிமுகமான முதல் படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை முதலில் ராஜலட்சுமி தான் பாட இருந்தாராம் ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களால் நடிகை அதிதி சங்கர் பாடியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இந்த படத்தில் நடித்த பிரகாஷ்ராஜின் நடிப்பு தான் இந்த படத்திற்கு பிளஸ் என்று கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ் இல்லையென்றால் இந்த படம் நல்லாவே இருந்திருக்காது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த படம் இருந்ததாக கூறப்படுகிறது.

கொம்பன் சாயலில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூரி, ராஜ்கிரன், கருணாஸ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விமல் திரைப்படம் உலகம் முழுக்க 40 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 32 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோடிக்கணக்கில் வசூல் அளித்ததால் அதிதி சங்கருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் அதிதி சங்கர் அடுத்த படத்தில் கமிட்டாகி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version