பெண் இயக்குனருக்காக யோகிபாபு செய்த செயலால் நெகிழும் ரசிகர்கள்!!

COMEDY actor yogibabu: தற்போது நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவர் தற்போது பேய் மாமா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா தற்போது நடந்தது அந்த வெளியீட்டு விழாவில் இவர் பேசுகையில் பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இவர் திரைப்படத்தில் இலவசமாக நடித்துக் கொடுத்தாக கூறியுள்ளார்.

அந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் இயக்குனர் செல்வமணி அவர்கள் பேசுகையில் ஒரு படத்தின் பட்ஜெட்டிர்க்கு ஏற்றார்போல் சம்பளம் வாங்க வேண்டும் என்றும் மார்க்கெட்டை வைத்து சம்பளம் வாங்க கூடாது என்றும் நடிகர், நடிகைகளுக்கு இயக்குனர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து பேச வந்த காமெடி நடிகர் யோகிபாபு அவர்கள் பேசும்போது இயக்குனர் செல்வராகவனின் உதவியாளராக இருந்த பெண் இயக்குனர் ஒருவர் எண்ணெய் வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கினார்.

அப்படி அவர் இயக்குவதற்கு முன்பே நான் உங்களுக்கு ஒரு கதை வைத்துள்ளேன் எனக் கூறி இந்த திரைப்படத்தில் நீங்கள் நடித்தால் என்னால் சம்பளம் கொடுக்க முடியாது எனவும் இந்த திரைப்படத்தில் வரும் பணத்தை வைத்துதான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் எனவும் கூறியிருந்தார். அதற்காக இவர் சம்பளம் வாங்காமல் படத்தை நடித்து முடித்துக் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் இந்த பேய் மாமா திரைப்படத்தில் நான் ஹீரோவாக நடித்து உள்ளேன். இந்த திரைப்படம் முதலில் வடிவேல் அவர்களுக்காக எழுதப்பட்ட கதை என்பதால் இதில் நான் நடிக்க பயந்தேன். அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என தெரிந்து இயக்குனர் ஒரு சில காட்சிகளை மாற்றி அமைத்து கொடுத்தார்.அதன்பின் தான் நான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என யோகிபாபு அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment