டிஸ்சார்ஜ் ஆன பிறகும் வீட்டுக்கு செல்லாத நடிகை யாஷிகா ஆனந்த்..! இணையத்தில் லீக்கனா ஆடியோ காலால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள மாமல்லபுரம் அருகே யாஷிகா அவர்கள் கார் விபத்தின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதேபோல இந்த விபத்தின் மூலமாக வள்ளி செட்டி பவானி என்ற ஒரு பெண் பலியாகிவிட்டார்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகமாக தன்னுடைய காரை ஓட்டியது தான் காரணம் இதனால் தான் உயிர்சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நமது நடிகை யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஒரே நேரத்தில் நீக்கியது மட்டுமல்லாமல் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார் இவ்வாறு அந்த பதிவை பார்த்து ரசிகர்கள் மன கஷ்டத்திற்கு ஆளாகி விட்டார்கள்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் பெரும் மனக் கஷ்டத்துடனும் குற்றவுணர்ச்சியுடனும் இருக்கிறேன் எனக்கு இதில் இருந்து எப்படி மீள்வது என்பது எனக்கு தெரியவில்லை அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு நிமிடமும் நான் பவானியை மிஸ் செய்கிறேன் என்றும் யாஷிகா கூறியுள்ளார்.

yashika-anand
yashika-anand

அது மட்டும் இல்லாமல் என்னால் தான் இவ்வளவு காரணம் நான் பவனியின் குடும்பத்திற்கு என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை அவருடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகி விட்டேன் நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சியுடன் தான் இருப்பேன் என கூறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அவரால்  எலும்பு முறிவின் காரணமாக சுமார் ஐந்து மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது என மருத்துவர் கூறியது மட்டுமல்லாமல் சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவரிடம் போனில் பேசியுள்ளார் அப்போது அவர்கள் பேசிய ஆடியோ வானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment