விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சினிமாவில் பெரிதாக பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் மிகவும் உதவியாக இருந்து வரும் ரியாலிடி ஷோ தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் என தொடர்ந்து பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு பிரபலம் அடைந்த பலரும் தற்பொழுது சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக ஒளிபரப்பி வந்த நிலையில் தற்பொழுது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டுத் தோட்டிய எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.
மேலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வந்தார். இப்படிப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு தனது நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது கார் விபத்துக்கு உள்ளாகியது.
அந்த விபத்தில் இவருடைய நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் யாஷிகா படுகாயங்களுடன் தவித்தார். தற்பொழுது உடல்நிலை சரியாகி சில மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் யாஷிகா தொடர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது,கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் யாஷிகாவின் பிறந்தநாள் அன்று அவருடைய தீவிர ரசிகர்களில் ஒருவர் ரிங்கோ என்பவர் யாஷிகாவுக்காக யாஷிகா மற்றும் அவருடைய மறைந்த தோழி இருவரும் உள்ள பெயிண்டிங் ஒன்றை ரத்தத்தால் வரைந்து அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியடைந்த யாஷிகா அழுதுக் கொண்டே தனது தோழியை பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்துடன் அந்தப் புகைப்படத்தை தந்த ரசிகருடன் அழுது கொண்டே எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.