2010ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை எமி ஜாக்சன் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் தனுஷ் உடன் தங்க மகன், விஜய் உடன் தெறி, ரஜினிகாந்துடன் 2.0 என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்ததால் பிறகு முழு நேரமும் அவருடன் இருந்து வந்தார்.
எனவே சினிமாவில் நடிக்காமல் மொத்தமாக விலகினார் எமி ஜாக்சன் மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்தார் இந்த ஜோடிக்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது எனவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு காதலனை விட்டு பிரிந்து பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் எமி ஜாக்சன். மேலும் இது குறித்து கடந்த ஆண்டு காதலனை விட்டு பிரிந்ததாக அறிவித்த இவர் அதன் பிறகு சில மாதங்களிலேயே பிரபல நடிகரை காதலிக்க தொடங்கினார்.
அவர் காஸிப் கேர்ள் என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எட் வெஸ்ட்விக்கை தற்பொழுது காதலித்து வருகிறார் மேலும் தற்பொழுது இந்த ஜோடி இத்தாலி நாட்டுக்கு டேட்டிங் சென்றுள்ளனர் அங்கு காதலனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தபடி நடிகை எமி ஜாக்சன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு ஏ எல் விஜய் இயக்கம் புதிய திரைப்படத்தில் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.