52 வயதில் குழந்தையை பெற்றெடுத்த நடிகைகள்!!

actress who got child at 52 age: நம்ம தமிழ் சினிமா துறையில் மிகவும் முக்கியமான ஒரு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. ரேவதி அவர்கள் 1980 மற்றும் 1990 களில் ஒரு டாப் ஹீரோயினாக இருந்தார். இவருடைய இயற்பெயர் ஆஷா ஹெல்லோனி நாயர் என்பதுதான். தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார் நடித்து மட்டுமல்லாமல் பல படங்களை டைரக்ட் பண்ணியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் நிறைய நேஷனல் அவார்டு களும், ஃபிலிம்ஃபேர் சவுத் அவார்டுகளும் வாங்கியுள்ளார். ரேவதி அவர்கள் 1986இல் ”சுரேஷ் மேனன்” என்ற திரைப்பட நடிகரை திருமணம் செய்து கொண்டார். தற்போது உள்ள சூர்யா ஜோதிகாவை போல் அந்த காலத்தில் ரேவதி சுரேஷ் மேனன் என்றாலே ஒரு நல்ல ஜோடிகள் என்று சொல்வார்கள்.

ஆனால் 2005 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். 2013 வது வருஷம் இவர்களுக்கு கோர்ட்டிலிருந்து டிவோசும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் ரேவதி அவர்கள் 2005 ஆம் ஆண்டிலிருந்து தனிமையில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். தனக்கென்று ஒரு துணை வேண்டும் அது மட்டுமல்லாமல் தான் இன்னொரு ஜீவனுக்காக வாழவேண்டும் என்றும் தனிமையில் வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

சமீப காலத்தில் இருந்து ரேவதி அவர்கள் எந்த ஃபங்ஷனுக்கு வந்தாலும் கையில் ஒரு குழந்தையோடு வலம் வந்தார். யார் இந்த குழந்தை உங்கள் சொந்தக்கார குழந்தையா அல்லது தத்து குழந்தையா என்று அனைவரும் கேட்கும் போது அமைதியாகத்தான் இருந்தார். பின்னர் ரேவதி அவர்கள் இந்த விஷயத்தை இனிமேல் மூடிமறைக்க முடியாது என்று யோசித்து உண்மையை உடைத்தார்.

ரேவதி அவர்கள் 2018ஆம் ஆண்டு அதற்கான உண்மையை உடைத்தார். இந்தப் பெண் குழந்தை என்னுடைய குழந்தை தான் என்று கூறினார். இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது என்று நாம் யோசிக்கலாம். ஏனென்றால் ரேவதி அவர்கள் 2005ஆம் ஆண்டிலிருந்து தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.அப்படி இருந்தும் இந்த குழந்தையை எப்படி பெற்றெடுக்க முடியும், அது மட்டுமில்லாமல் இவருக்கு 50 வயதைத் தாண்டி இருக்கும் பட்சத்தில் எவ்வாறு இந்த குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்று அனைவரின் கேள்விக்கும் ஆளாகியுள்ளார். அப்பொழுது தான் ரேவதி அவர்கள் டெஸ்ட் ட்யூப் பேபி மூலமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

ரேவதி அவர்கள் தனக்கும் ஒரு துணை வேண்டும் என்றும் குழந்தைக்கு தானும் ஒரு தாயாக இருக்க வேண்டும் என்ற மன நிலையில் இந்த முடிவினை எடுத்து இருக்கிறார். இதற்கு சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்ததாக ராதிகா, சரத்குமார் இவரும் ரேவதியை போலவே ஒரு சிறந்த நடிகையாக 1980 மற்றும் 1990களில் வலம் வந்தவர் தான். ராதிகா அவர்கள் சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். என்னவென்றால் நோய்த்தொற்று இன்னும் போகவில்லை நாம் அனைவரும் இன்னும் விழிப்புடன் தான் இருக்கவேண்டும். முக கவசம் அணிந்து தான் வெளியில் செல்ல வேண்டும் அதுமட்டுமல்லாமல் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் சில பொதுமக்கள் இதனை இக்னோர் செய்வதாக அவர் கூறியுள்ளார். இதெல்லாம் நாம் எப்பொழுது  கற்றுக்கொள்ளப் போகிறோம் என்று ரொம்பவும் பயந்துபோன மாதிரியான ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version