நடிக்கும்போது கவர்ச்சியே காட்டவில்லை என்றாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த 4 நடிகைகள்.!

பொதுவாக சினிமா என்றாலே ஒரு நடிகை நடிப்பு திறமையையும் தாண்டி கவர்ச்சியில் ஆர்வம் காட்டினால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர முடியும். அந்த வகையில் கவர்ச்சியில் ஆர்வம் காட்டாத பலரும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருபவர்களும் உள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தில் ஒரு நடிகையை நடிக்க வைக்கிறார் என்றால் அவரின் நடிப்புத் திறமை, கவர்ச்சி இந்த இரண்டும் அதிகமாக இருக்கிறதா என்று யோசித்து அதன் பிறகு தான் அவரின் திரைப்படத்தில் நடிக்க வைப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் நடிகைகளும் பணத்தின் மீது இருக்கும் ஆசையினால் அதிக கவர்ச்சி காட்டி தனது சம்பளத்தை அதிகமாக பெற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து கடைசி வரையும் கவர்ச்சியில் பெரிதாக  ஆர்வம் காட்டாமல் தனது அழகினாலும், சிறந்த நடிப்புத் திறமையினால் முன்னணி நடிகைகளாக தற்போது வரையிலும் வலம் வந்து கொண்டிருக்கும் நான்கு நடிகைகள் உள்ளார்கள்.

அந்த வகையில் நடிகை ரேவதி, நதியா, ஷாலினி,  நஸ்ரியா இவர்கள் அனைவருமே முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் தான்.ஆனால் தற்போது இவர்கள் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Leave a Comment